ETV Bharat / bharat

பெற்ற தாயால் கைவிடப்பட்ட பார்வையற்ற பெண் குழந்தை; நிதிப்பொறியாளராக உருவாக்கிய வளர்ப்புத்தாய்... இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!

author img

By

Published : Sep 15, 2022, 6:09 PM IST

பெற்ற தாயால் கைவிடப்பட்ட பார்வையற்ற பெண் குழந்தை, இப்போது அமெரிக்காவில் பெருநிறுவனத்தில் நிதிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த சாதனைப் பெண்ணை வளர்த்து, இந்த நிலைக்கு உயர்த்தியவர் அவளது வளர்ப்புத்தாய் என்பது சிலிர்க்க வைக்கும் உண்மை.

baby
baby

ஹைதராபாத்: பார்வையற்ற மூன்று மாத பெண் குழந்தை ஒன்றை, தாயார் கைவிட்டுவிட்ட நிலையில், நிர்மலா என்ற பெண்மணி அவளை தத்தெடுத்துள்ளார். தனக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், பார்வையற்ற அந்த குழந்தையைத் தத்தெடுத்தார்.

ஷாலினி என்ற அந்த குழந்தைக்கு நம்பிக்கையூட்டி வளர்த்து, அவளைப் படிக்க வைத்தார். அவளுக்காக பார்வையற்றவர்கள் பழகும் பிரெய்லி மொழியை நிர்மலா கற்றுக்கொண்டார். பார்வையற்ற குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என கற்றுக்கொண்டு, ஷாலினியை வளர்த்தார். கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லா கல்வியையும் ஷாலினிக்கு அறிமுகப்படுத்தினார். கல்வியை மட்டுமல்லாமல் இசை, நடனம், தற்காப்புக்கலை என அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.

இதுகுறித்து ஷாலினி கூறுகையில், "அம்மா எனக்கு கொடுத்த தன்னம்பிக்கையை சொற்களில் கூறவிட முடியாது. அவள் கொடுத்த தைரியத்தில் மலையேற்றம் செய்தேன். அந்தமான் நிக்கோபாரில் ஸ்கூபா டைவிங் செய்தேன். ஆறு வயதில் இசைப்பள்ளியில் சேர்ந்தேன். பியானோ, சல்சா கற்றுக்கொண்டேன். 2012இல் சர்வதேச சல்சா போட்டியிலும் பங்கேற்றேன்.

பள்ளிப்படிப்புக்கு பின், அமெரிக்காவில் இளங்கலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாட் தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றதால், அதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 2013இல் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு தனியாக சென்றபோது, அம்மா கற்றுக் கொடுத்த பாடங்களும், நம்பிக்கையும்தான் என்னுடன் இருந்தது" என்று கூறினார்.

அமெரிக்காவில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்த ஷாலினி, கொலராடோவில் உள்ள ஹியூமன் கம்ப்யூட்டிங் லேப்-ல் மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அதோடு பிஹெச்.டி படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஊக்கத்தால், ஃபைனான்சியல் இன்ஜினியராகும் கனவை நிறைவேற்றினார், ஷாலினி. 2018இல் முதுகலை முடித்தார். தற்போது, ​​நியூயார்க்கில் உள்ள பிஎம்ஓ என்ற நிதிக் குழுமத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனது பணி குறித்து ஷாலினி கூறுகையில், "பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களிடம் வருகின்றன. எங்கள் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகுதான், நிறுவனங்கள் முதலீடுகளைப் பெறுகின்றன. இது சவால்கள் நிறைந்த தொழில். பாகுபாடு எங்கும் உண்டு. ஆனால், அதை முறியடிப்பதில்தான் நம் திறமை இருக்கிறது. ஸ்கூல் ஆஃப் பிசினஸில் ஃபைனான்சியல் இன்ஜினியரிங்கில் சேர்ந்த முதல் பார்வையற்ற மாணவி நான். விடாமுயற்சியுடன் படிப்பை முடித்தேன். இதெல்லாம் சாத்தியமானது என் அம்மாவால்தான்'' என்று கூறினார்.

இப்போது பார்வையற்றவர்களுக்காக, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக வீடியோக்களை உருவாக்கி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார், ஷாலினி.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 10ஆயிரம் அடி நடந்தால் கேன்சர் குறையும் - ஆய்வில் புதிய தகவல்

ஹைதராபாத்: பார்வையற்ற மூன்று மாத பெண் குழந்தை ஒன்றை, தாயார் கைவிட்டுவிட்ட நிலையில், நிர்மலா என்ற பெண்மணி அவளை தத்தெடுத்துள்ளார். தனக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், பார்வையற்ற அந்த குழந்தையைத் தத்தெடுத்தார்.

ஷாலினி என்ற அந்த குழந்தைக்கு நம்பிக்கையூட்டி வளர்த்து, அவளைப் படிக்க வைத்தார். அவளுக்காக பார்வையற்றவர்கள் பழகும் பிரெய்லி மொழியை நிர்மலா கற்றுக்கொண்டார். பார்வையற்ற குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என கற்றுக்கொண்டு, ஷாலினியை வளர்த்தார். கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லா கல்வியையும் ஷாலினிக்கு அறிமுகப்படுத்தினார். கல்வியை மட்டுமல்லாமல் இசை, நடனம், தற்காப்புக்கலை என அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.

இதுகுறித்து ஷாலினி கூறுகையில், "அம்மா எனக்கு கொடுத்த தன்னம்பிக்கையை சொற்களில் கூறவிட முடியாது. அவள் கொடுத்த தைரியத்தில் மலையேற்றம் செய்தேன். அந்தமான் நிக்கோபாரில் ஸ்கூபா டைவிங் செய்தேன். ஆறு வயதில் இசைப்பள்ளியில் சேர்ந்தேன். பியானோ, சல்சா கற்றுக்கொண்டேன். 2012இல் சர்வதேச சல்சா போட்டியிலும் பங்கேற்றேன்.

பள்ளிப்படிப்புக்கு பின், அமெரிக்காவில் இளங்கலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாட் தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றதால், அதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 2013இல் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு தனியாக சென்றபோது, அம்மா கற்றுக் கொடுத்த பாடங்களும், நம்பிக்கையும்தான் என்னுடன் இருந்தது" என்று கூறினார்.

அமெரிக்காவில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்த ஷாலினி, கொலராடோவில் உள்ள ஹியூமன் கம்ப்யூட்டிங் லேப்-ல் மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அதோடு பிஹெச்.டி படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஊக்கத்தால், ஃபைனான்சியல் இன்ஜினியராகும் கனவை நிறைவேற்றினார், ஷாலினி. 2018இல் முதுகலை முடித்தார். தற்போது, ​​நியூயார்க்கில் உள்ள பிஎம்ஓ என்ற நிதிக் குழுமத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனது பணி குறித்து ஷாலினி கூறுகையில், "பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களிடம் வருகின்றன. எங்கள் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகுதான், நிறுவனங்கள் முதலீடுகளைப் பெறுகின்றன. இது சவால்கள் நிறைந்த தொழில். பாகுபாடு எங்கும் உண்டு. ஆனால், அதை முறியடிப்பதில்தான் நம் திறமை இருக்கிறது. ஸ்கூல் ஆஃப் பிசினஸில் ஃபைனான்சியல் இன்ஜினியரிங்கில் சேர்ந்த முதல் பார்வையற்ற மாணவி நான். விடாமுயற்சியுடன் படிப்பை முடித்தேன். இதெல்லாம் சாத்தியமானது என் அம்மாவால்தான்'' என்று கூறினார்.

இப்போது பார்வையற்றவர்களுக்காக, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக வீடியோக்களை உருவாக்கி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார், ஷாலினி.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 10ஆயிரம் அடி நடந்தால் கேன்சர் குறையும் - ஆய்வில் புதிய தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.