ETV Bharat / bharat

மரத்தின் மீது வேன் மோதி விபத்து - 10 பேர் பலி, 7 பேர் படுகாயம்!

author img

By

Published : Jun 23, 2022, 10:01 PM IST

உத்தரப் பிரதேசத்தில் சாலையோர மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

Pilibhit
Pilibhit

லக்னோ: ஹரித்வாரில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 17 பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிலிபிட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி? - ஏக்நாத்திடம் தாவிய எம்.எல்.ஏக்கள்

லக்னோ: ஹரித்வாரில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 17 பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிலிபிட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி? - ஏக்நாத்திடம் தாவிய எம்.எல்.ஏக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.