மல்காபுரம்: தெலங்கானா மாநிலம் மல்காபுரத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 5 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், மல்காபுரம் போலீசார் தரப்பில், ஆம்பர்பேட்டையில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வகுப்பு ஆசிரயருடன் அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளனர். மீண்டும் திரும்பும்போது மாணவர்கள் அருகில் உள்ள குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
அவரும் அனுமதி அளித்து அவர்களுடன் குளத்தில் இறங்கினார். அப்போது மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அவர்களை காப்பாற்ற சென்ற ஆசிரியரும் மூழ்கினார். இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவயிடத்திற்கு சென்று உடல்களை மீட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’என்னிடம் ரூ.50 கோடி கேட்டார் கெஜ்ரிவால்..!’ - மோசடி குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர்