டெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், நுரையீரல் தொற்று படிப்படியாக குறைந்துவருவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லாலு பிரசாத்தின் மகள் மிஷா பாரதி ஊடகங்களிடம் பேசுகையில், முன்பைவிட தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது லாலு பிரசாத் மருத்துவர்களின் மேற்பார்வையில் தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
90-களின் முற்பகுதியில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லாலு, 2017ஆம் ஆண்டு அவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22: முழு விவரம்