ETV Bharat / bharat

Mann Ki Baat : 100வது எபிசோடில் பிரதமர் மோடி உரை - தமிழ்ப் பெண்களை நினைவுகூர்ந்த மோடி!

author img

By

Published : Apr 30, 2023, 1:45 PM IST

நாட்டு மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் நிகழ்ச்சியாக மன் கி பாத் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

Modi
Modi

டெல்லி : மன் கி பாத் நிகழ்ச்சி மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் முதல்முறையாக அக்டோபர் 3ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 100வது எபிசோட் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதியை லட்சக்கணக்கான மக்கள் கேட்டனர்.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மதம் விஜயதசமி தினத்தன்று மன் கி பாத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டு மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக அமைந்ததாக கூறினார். மன் கி பாத் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருவிழாவாக மாறியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி விஜயதசமி பண்டிகை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மன் கி பாத் பயணத்தைத் தொடங்கியதாகவும், விஜயதசமி என்பது தீமையை வென்ற நன்மையை நிலைநாட்டும் திருவிழா என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சி தனித்துவமாக மாறியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மன் கி பாத் நாட்டு மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் காத்திருக்கும் விழாவாகவும் மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

’’ஆயிரக்கணக்கான கடிதங்கள், லட்சக்கணக்கான செய்திகள் எனக்கு வருகின்றன. அவற்றை படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவில் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படுகின்றன. உணர்ச்சிவசத்தில் அடித்து செல்லப்பட்டு, பின்னர் என்னை நானே இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.

நமது குடிமக்களின் ஆளுமைக்கான நிகழ்ச்சி இது என்றும்; இதில் நாம் நேர்மறையான விஷயங்களை கொண்டாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் மக்களும் பங்கேற்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உரையின் இடையே தமிழக பெண்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி வேலூர் நாக நதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்ததாகவும் இதுபோன்ற செயல்கள் பெண்களின் ஆளுமைத்திறனை காட்டுகின்றன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் பலி - 11 பேர் கவலைக்கிடம்.. நடந்தது என்ன?

டெல்லி : மன் கி பாத் நிகழ்ச்சி மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் முதல்முறையாக அக்டோபர் 3ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 100வது எபிசோட் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதியை லட்சக்கணக்கான மக்கள் கேட்டனர்.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மதம் விஜயதசமி தினத்தன்று மன் கி பாத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டு மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக அமைந்ததாக கூறினார். மன் கி பாத் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருவிழாவாக மாறியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி விஜயதசமி பண்டிகை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மன் கி பாத் பயணத்தைத் தொடங்கியதாகவும், விஜயதசமி என்பது தீமையை வென்ற நன்மையை நிலைநாட்டும் திருவிழா என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சி தனித்துவமாக மாறியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மன் கி பாத் நாட்டு மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் காத்திருக்கும் விழாவாகவும் மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

’’ஆயிரக்கணக்கான கடிதங்கள், லட்சக்கணக்கான செய்திகள் எனக்கு வருகின்றன. அவற்றை படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவில் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படுகின்றன. உணர்ச்சிவசத்தில் அடித்து செல்லப்பட்டு, பின்னர் என்னை நானே இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.

நமது குடிமக்களின் ஆளுமைக்கான நிகழ்ச்சி இது என்றும்; இதில் நாம் நேர்மறையான விஷயங்களை கொண்டாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் மக்களும் பங்கேற்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உரையின் இடையே தமிழக பெண்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி வேலூர் நாக நதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்ததாகவும் இதுபோன்ற செயல்கள் பெண்களின் ஆளுமைத்திறனை காட்டுகின்றன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் பலி - 11 பேர் கவலைக்கிடம்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.