டெல்லி: நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளை பகிர்ந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இதுபோன்ற பண்டிகைகள் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ஹோலி பண்டிகை தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா ஹோலி. இது சமூக நல்லிணக்கத்தின் பண்டிகையாகும், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அன்பையும் நம்பிக்கையையும் தருகிறது. இந்தத் திருவிழா நமது கலாசார பன்முகத்தன்மையையும், தேசியத்தின் உணர்வையும் மேலும் வலுப்படுத்தட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது எய்ம்ஸ் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) காலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27) திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதியம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.