ETV Bharat / bharat

4 மாத கர்ப்பிணி ஆடு வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார்!

author img

By

Published : Apr 1, 2022, 2:29 PM IST

கேரளாவில், 4 மாத கர்ப்பிணி ஆட்டை 3 பேர் வன்புணர்வு செய்து கொன்றுவிட்டதாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மூவரை காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காசர்கோடு
காசர்கோடு

காசர்கோடு: கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோட் என்ற பகுதியில் வசித்துவரும் மொய்தீன் குஞ்சு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று உள்ளது. இந்த ஆட்டை 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுவிட்டதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மொய்தீன் குஞ்சு காசர்கோட்டின் கனஹங்காடு பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்ததால், மொய்தீனின் உணவகம் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 30) மூடப்பட்டிருந்தது.

அப்போது, கடையின் பின்னால் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்று இரவில் கதறும் சத்தம் மொய்தீனுக்கு கேட்டுள்ளது. கதறல் சத்ததை அடுத்து, அப்பகுதி மக்களுடன் மொய்தீன் கடையின் பின்புறம் சென்று பார்த்தபோது, செந்தில் மற்றும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

அதில், செந்தில் மட்டும் அப்பகுதி மக்களிடம் பிடிபட, இரண்டு பேர் தப்பித்துவிட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செந்தில், மற்றொரு உணவகத்தின் பணியாளர் ஆவார். இதையடுத்து, வழக்குப்பதிவு மேற்கொண்ட காவல்துறையினர் செந்திலை கைது செய்து மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்...

காசர்கோடு: கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோட் என்ற பகுதியில் வசித்துவரும் மொய்தீன் குஞ்சு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று உள்ளது. இந்த ஆட்டை 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுவிட்டதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மொய்தீன் குஞ்சு காசர்கோட்டின் கனஹங்காடு பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்ததால், மொய்தீனின் உணவகம் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 30) மூடப்பட்டிருந்தது.

அப்போது, கடையின் பின்னால் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்று இரவில் கதறும் சத்தம் மொய்தீனுக்கு கேட்டுள்ளது. கதறல் சத்ததை அடுத்து, அப்பகுதி மக்களுடன் மொய்தீன் கடையின் பின்புறம் சென்று பார்த்தபோது, செந்தில் மற்றும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

அதில், செந்தில் மட்டும் அப்பகுதி மக்களிடம் பிடிபட, இரண்டு பேர் தப்பித்துவிட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செந்தில், மற்றொரு உணவகத்தின் பணியாளர் ஆவார். இதையடுத்து, வழக்குப்பதிவு மேற்கொண்ட காவல்துறையினர் செந்திலை கைது செய்து மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.