பனிக்காலம் முழுவதும் தலைநகர் டெல்லி காற்றுமாசு சிக்கலால் பெரும் பாதிப்பு அடைவது வழக்கமான நிகழ்வாக இருந்துவருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதே காற்றுமாசுவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கும் அவலமும் ஏற்படுகிறது. இதையடுத்து கடந்த சில வருடங்களாகவே டெல்லியில் பட்டாசு வெடிக்க பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. இந்தாண்டும் அரசு, நீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது.
தொடர்ந்து திணறும் தலைநகர்
அதையும் மீறி நவம்பர் 4ஆம் தேதி டெல்லியில் பட்டாசு வெடித்ததன் விளைவாக கடந்த ஐந்து நாள்களாக கடுமையான காற்று மாசு சிக்கலில் டெல்லி திணறிவருகிறது. இன்றும் டெல்லியின் முக்கிய பகுதிகளில் காற்றின் தரத்தை குறிக்கும் அலகான AOI(air quality index) 400க்கும் மேல் இருந்தன.
![Delhi-NCR pollution level](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13582299_d.jpg)