ETV Bharat / bharat

கையெழுத்தாகிறது ஷாஹூத் அணை ஒப்பந்தம்? ஆப்கன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

author img

By

Published : Feb 9, 2021, 1:34 PM IST

டெல்லி: ஆப்கானிஸ்தான் அதிபருடன் காணொலி வழியாக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அவருடன் கலந்துரையாடவுள்ளார். அப்போது, ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

PM Modi to hold talks with Afghan President Ashraf Ghani today
PM Modi to hold talks with Afghan President Ashraf Ghani today

பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகிய இருவரும் இன்று (பிப். 9) உச்சிமாநாட்டில் காணொலி மூலமாக கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா கட்டமைத்துவரும் ஷாஹூத் அணை ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதன்மூலம் விவசாயமும் செய்யலாம்.

முன்னதாக 20 டன் உயிர் காக்கும் மருந்துகள், ஐந்து லட்சம் கரோனா மருந்துகளை ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ஆப்கானுக்கு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பிவைத்த இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகிய இருவரும் இன்று (பிப். 9) உச்சிமாநாட்டில் காணொலி மூலமாக கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா கட்டமைத்துவரும் ஷாஹூத் அணை ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதன்மூலம் விவசாயமும் செய்யலாம்.

முன்னதாக 20 டன் உயிர் காக்கும் மருந்துகள், ஐந்து லட்சம் கரோனா மருந்துகளை ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ஆப்கானுக்கு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பிவைத்த இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.