ETV Bharat / bharat

புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன்: பிரதமர் மோடி

author img

By

Published : Feb 25, 2021, 8:22 PM IST

புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி உரை

புதுச்சேரி அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை இன்று (பிப்.25) தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஏழைகளுக்கு உதவும் எண்ணம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டனர். இனிமேல் புதுச்சேரி வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் சிறந்து விளங்கும்.

பிரதமர் மோடி உரை

முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது. அடுத்து அமையப்போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது பெண் ஒருவர் குறை சொன்னபோது தேசமே தொலைக்காட்சியில் பார்த்தது.

ஆனால் அவர் ராகுலிடம் மாற்றி மொழி பெயர்த்தார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் இடையூறாக இருந்தது. ஜனநாயக விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பார்கள். புதுச்சேரியின் மாண்பை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: திருவள்ளூவரை நினைவுக் கூர்ந்த பிரதமர் மோடி!

புதுச்சேரி அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை இன்று (பிப்.25) தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஏழைகளுக்கு உதவும் எண்ணம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டனர். இனிமேல் புதுச்சேரி வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் சிறந்து விளங்கும்.

பிரதமர் மோடி உரை

முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது. அடுத்து அமையப்போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது பெண் ஒருவர் குறை சொன்னபோது தேசமே தொலைக்காட்சியில் பார்த்தது.

ஆனால் அவர் ராகுலிடம் மாற்றி மொழி பெயர்த்தார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் இடையூறாக இருந்தது. ஜனநாயக விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பார்கள். புதுச்சேரியின் மாண்பை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: திருவள்ளூவரை நினைவுக் கூர்ந்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.