ETV Bharat / bharat

கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

author img

By

Published : May 21, 2021, 8:48 PM IST

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் நாட்டு வைத்தியரிடம் கரோனா மருந்து வாங்க கிருஷ்ணாபட்டணம் எனும் ஊரில் பல்லாயிரக்கணக்கான பேர் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

people rushed for  ayurveda medicine for corona at krishnapatnam
கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

அமராவதி: ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா. இவர், தனது சொந்த முயற்சியில் கரோனாவுக்கு மருந்தினை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தை உட்கொண்டவர்கள் கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இவரின் மருந்து குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவரிடம் மருந்து வாங்க கிருஷ்ணாபட்டணம் வரத்தொடங்கினர். முதல் நாளில் 500 பேருக்கு மருந்து வழங்கிய அவரிடம், நாளுக்கு நாள் மருந்து வாங்க மக்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்து கிருஷ்ணாபட்ணம் வந்த நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அவர் வழங்கும் மருந்தின் தரத்தை சோதிப்பதற்காக மருந்தைக் கைப்பற்றி மருந்து விநியோகத்திற்கும் தடை விதித்தார். இந்நிலையில், சில நாட்கள் மருந்து விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

நேற்று மீண்டும் மருந்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று கிருஷ்ணாபட்டணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து மீண்டும் குவியத்தொடங்கினர். நெல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தோரும் இந்த மருந்தினை வாங்க வந்திருந்தனர்.

கரோனா சூழலில் பாதுகாப்பற்ற முறையில் சமூக விலகலைப் பின்பற்றாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியதால், மருந்து விநியோகத்திற்கு இன்று காவல் துறையினர் தடைவிதித்தனர். இதனால், அங்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் விரும்புகிறார் எனக்கூறப்படுகிறது. ஆனந்தையாவிடம் இருந்த பெறப்பட்ட மருந்து ஆய்வக சோதனையில் உள்ளது. ஆய்வக முடிவுகள் நல்லமுறையில் வந்தால், இந்த மருந்து விநியோகத்திற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பனை ஓலையால், தனிபெரும் சிற்பங்கள் செய்யும் நாட்டு வைத்தியர்..!

அமராவதி: ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா. இவர், தனது சொந்த முயற்சியில் கரோனாவுக்கு மருந்தினை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தை உட்கொண்டவர்கள் கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இவரின் மருந்து குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவரிடம் மருந்து வாங்க கிருஷ்ணாபட்டணம் வரத்தொடங்கினர். முதல் நாளில் 500 பேருக்கு மருந்து வழங்கிய அவரிடம், நாளுக்கு நாள் மருந்து வாங்க மக்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்து கிருஷ்ணாபட்ணம் வந்த நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அவர் வழங்கும் மருந்தின் தரத்தை சோதிப்பதற்காக மருந்தைக் கைப்பற்றி மருந்து விநியோகத்திற்கும் தடை விதித்தார். இந்நிலையில், சில நாட்கள் மருந்து விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

நேற்று மீண்டும் மருந்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று கிருஷ்ணாபட்டணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து மீண்டும் குவியத்தொடங்கினர். நெல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தோரும் இந்த மருந்தினை வாங்க வந்திருந்தனர்.

கரோனா சூழலில் பாதுகாப்பற்ற முறையில் சமூக விலகலைப் பின்பற்றாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியதால், மருந்து விநியோகத்திற்கு இன்று காவல் துறையினர் தடைவிதித்தனர். இதனால், அங்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் விரும்புகிறார் எனக்கூறப்படுகிறது. ஆனந்தையாவிடம் இருந்த பெறப்பட்ட மருந்து ஆய்வக சோதனையில் உள்ளது. ஆய்வக முடிவுகள் நல்லமுறையில் வந்தால், இந்த மருந்து விநியோகத்திற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பனை ஓலையால், தனிபெரும் சிற்பங்கள் செய்யும் நாட்டு வைத்தியர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.