ETV Bharat / bharat

New Covid variant: தடுப்பூசி திட்டத்தில் கவனம் - ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் அறிவுறுத்தல்

author img

By

Published : Nov 27, 2021, 7:48 PM IST

உருமாறிய தொற்று பரவல் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசி திட்டத்தை கவனத்துடன் பின்பற்ற பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

PM Modi
PM Modi

நாட்டின் பொது சுகாதார ஆயத்தநிலை, கோவிட்-19 தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர் அலுலவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, நிதி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவலின் உலகளாவிய நிலவரம், நோயின் தன்மை குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது. ‘ஒமிக்ரான்‘(Omicron) எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதன் தன்மைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், அலுவலர்கள் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர்.

பின்னர் அலுவலர்களிடம் பேசிய பிரதமர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

புதிய வகைத் தொற்றை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய பிரதமர், சர்வதேசப் பயணிகளின் வருகை, அவர்களுக்கான பரிசோதனை நடைமுறைகள், ‘அதிக பாதிப்பு‘ அபாயமுள்ள நாடுகளிலிருந்து வருவோரிடம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

நாட்டின் பொது சுகாதார ஆயத்தநிலை, கோவிட்-19 தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர் அலுலவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, நிதி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவலின் உலகளாவிய நிலவரம், நோயின் தன்மை குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது. ‘ஒமிக்ரான்‘(Omicron) எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதன் தன்மைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், அலுவலர்கள் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர்.

பின்னர் அலுவலர்களிடம் பேசிய பிரதமர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

புதிய வகைத் தொற்றை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய பிரதமர், சர்வதேசப் பயணிகளின் வருகை, அவர்களுக்கான பரிசோதனை நடைமுறைகள், ‘அதிக பாதிப்பு‘ அபாயமுள்ள நாடுகளிலிருந்து வருவோரிடம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.