ETV Bharat / bharat

ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்?

author img

By

Published : Jun 1, 2023, 9:44 PM IST

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, அவரது இல்லத்தில் வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

Sharad Pawar
Sharad Pawar

மும்பை : மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்திய மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வார்ஷா மாளிகையில் வைத்து நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் ஜூன் 12ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, சரத் பவார் அழைத்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் எழும்பி உள்ள பாஜகவின் எதிர்ப்பு அலையில், எதிர்க்கட்சிகளோடு ஒன்றிணையுமாறு ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் சரத் பவாருடன் சேர்ந்து சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரேவும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியில் திரண்டனர். மேலும் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், உத்தவின் முதலமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து பா.ஜ.க ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். உத்தவ் அணியிடம், இருந்த சிவசேனா கட்சி, வில், அம்பு சின்னம் ஆகியவை ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவே சேனா அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் அண்மையில் கூறினார். இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் நடந்த ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் சந்திப்பு மராட்டிய அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருப்பதை மாற்றான் தாயின் அரவணைப்பில் இருப்பது போல் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவே சேனா அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நினைப்தாக சிவ சேனாவின் பத்திரிக்கையான சமனாவில் கட்டுரையாக வெளியானது.

அதன் காரணமாக பாஜக கூட்டணியில் நீடிக்கும் முடிவை ஏக்நாத் ஷிண்டே மறுபரிசீலானை செய்து இருக்கலாமோ எனக் கூறப்படுகிறது. சிவசேனா பிளவுக்கு பின் முதலமைச்சராக ஷிண்டே பொறுப்பேற்றபின் சரத் பவாருடன் முதல் முறையாக நடக்கும் சந்திப்பு இது. அதேநேரம் இரு தலைவர்களும் தற்போதைய அரசியல் விவரம் குறித்தும், வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து ம் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்... காங்கிரஸ் என்ன திட்டம்?

மும்பை : மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்திய மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வார்ஷா மாளிகையில் வைத்து நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் ஜூன் 12ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, சரத் பவார் அழைத்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் எழும்பி உள்ள பாஜகவின் எதிர்ப்பு அலையில், எதிர்க்கட்சிகளோடு ஒன்றிணையுமாறு ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் சரத் பவாருடன் சேர்ந்து சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரேவும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியில் திரண்டனர். மேலும் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், உத்தவின் முதலமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து பா.ஜ.க ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். உத்தவ் அணியிடம், இருந்த சிவசேனா கட்சி, வில், அம்பு சின்னம் ஆகியவை ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவே சேனா அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் அண்மையில் கூறினார். இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் நடந்த ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் சந்திப்பு மராட்டிய அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருப்பதை மாற்றான் தாயின் அரவணைப்பில் இருப்பது போல் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவே சேனா அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நினைப்தாக சிவ சேனாவின் பத்திரிக்கையான சமனாவில் கட்டுரையாக வெளியானது.

அதன் காரணமாக பாஜக கூட்டணியில் நீடிக்கும் முடிவை ஏக்நாத் ஷிண்டே மறுபரிசீலானை செய்து இருக்கலாமோ எனக் கூறப்படுகிறது. சிவசேனா பிளவுக்கு பின் முதலமைச்சராக ஷிண்டே பொறுப்பேற்றபின் சரத் பவாருடன் முதல் முறையாக நடக்கும் சந்திப்பு இது. அதேநேரம் இரு தலைவர்களும் தற்போதைய அரசியல் விவரம் குறித்தும், வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து ம் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்... காங்கிரஸ் என்ன திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.