ETV Bharat / bharat

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கொடூரம்!

author img

By

Published : Nov 14, 2022, 9:38 PM IST

பீகாரில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. சிறுமி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

Minor
Minor

சமஸ்திபூர்: பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி 13 வயது சிறுமி மாயமாகியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று(நவ.13) வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கொடூரமான நிலையில் கிடந்தார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்தான் சிறுமி கிடைத்தார். அதைவிடக் கொடூரம் என்னவென்றால், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரது பிறப்புறுப்பு, மார்பகம், நாக்கு உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது கிராம மக்கள் உள்படப் பலர் சிகிச்சைக்காக நன்கொடை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் எந்த வகையிலும் தப்பிக்க மாட்டார்கள் என சமஸ்திபூர் காவல் கண்காணிப்பாளர் ஹிருதய் காந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாய்க்கு தூக்கு: இளைஞர்கள் கொடூரச் செயல் - வைரல் வீடியோ

சமஸ்திபூர்: பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி 13 வயது சிறுமி மாயமாகியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று(நவ.13) வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கொடூரமான நிலையில் கிடந்தார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்தான் சிறுமி கிடைத்தார். அதைவிடக் கொடூரம் என்னவென்றால், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரது பிறப்புறுப்பு, மார்பகம், நாக்கு உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது கிராம மக்கள் உள்படப் பலர் சிகிச்சைக்காக நன்கொடை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் எந்த வகையிலும் தப்பிக்க மாட்டார்கள் என சமஸ்திபூர் காவல் கண்காணிப்பாளர் ஹிருதய் காந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாய்க்கு தூக்கு: இளைஞர்கள் கொடூரச் செயல் - வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.