ETV Bharat / bharat

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

author img

By

Published : Jan 20, 2023, 2:28 PM IST

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

case
case

டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்ற பயணி தனது அருகில் அமர்ந்திருந்த வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த பன்னாட்டு நிதி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பயணிகளை கையாள்வதில் ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று(ஜன.19) சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதித்து ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் பதிலளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கைப்படி, விமான ஊழியர்கள் சங்கர் மிஸ்ராவை சரியாக கையாளவில்லை என்றும், விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட விமானத்தை ஓட்டிய விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜம்மூ காஷ்மீரில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்ரா

டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்ற பயணி தனது அருகில் அமர்ந்திருந்த வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த பன்னாட்டு நிதி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பயணிகளை கையாள்வதில் ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று(ஜன.19) சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதித்து ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் பதிலளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கைப்படி, விமான ஊழியர்கள் சங்கர் மிஸ்ராவை சரியாக கையாளவில்லை என்றும், விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட விமானத்தை ஓட்டிய விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜம்மூ காஷ்மீரில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்ரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.