மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் அதிகாலை 3.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 31 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய் பவானி கட்டிடம் தரை தளத்துடன் ஏழு மாடிகளைக் கொண்டது. இங்கு ஏற்பட்ட தீ விபத்து லெவல் 2 என மும்பை தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்த தீ விபத்தில் 51 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் தரைத்தளத்தில் இருந்த சில கடைகளும், அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.