ETV Bharat / bharat

விபரீத போட்டோஷூட்.. ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி... கவலைக்கிடம்!

author img

By

Published : Apr 4, 2022, 7:44 PM IST

கேரளாவில் வெட்டிங் போட்டோஷூட்டின் போது ஏற்பட்ட விபத்தால் புதுமண தம்பதியின் வாழ்க்கை பெரும் சோகக்கதையாக முடிந்துள்ளது.

newly wed drowns during wedding photoshoot
newly wed drowns during wedding photoshoot

திருவனந்தபுரம் : கேரளாவில் வெட்டிங் போட்டோஷூட் மீது அதீத மோகம் எழுந்துள்ளது. புதுமண தம்பதிகளும் திருமணத்திற்கு முந்தைய போட்டோசூட், பிந்தைய போட்டோசூட் என்று விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிப்பதும், இந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகள் பெறுவதில் ஆர்வம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

விபரீத வெட்டிங் போட்டோஷூட்: இதற்கேறப் போட்டோகிராபர்களும் தினுசு தினுசான ஐடியாக்களுடன் தம்பதிகளை அணுகிவருகின்றனர். அந்த வகையில் தம்பதிகளை ஆற்றின் நடுவே நிற்கவைத்து போட்டோ எடுப்பது, மலையின் உச்சியில் நிற்க வைத்து போட்டோ எடுப்பது, பைக்குகளில் சாகசம் காட்டும்படி போட்டோ எடுப்பது போன்ற விபரீத வெட்டிங் போட்டோஷூட்கள் நடந்துவருகின்றன.

வாழ்க்கையை பறித்த போட்டோஷூட்: இந்த போட்டோஷூட்கள் அவ்வப்போது சில தம்பதிகளில் வாழ்க்கையை பறித்துவிடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி கேரள மாநிலத்தில் திருமணமாகிய ஒரே மாதத்தில் தம்பதிக்கு போட்டோசூட்டின்போது ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றங்கரையோரத்தில் போட்டோஷூட்: கேரள மாநிலம் கோழிக்கோடு கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில்-கார்த்திகா என்ற புதுமண தம்பதி, திருமணத்திற்கு பிந்தைய போட்டோசூட் நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி இன்று (ஏப். 4) குட்டியாடி ஆற்றங்கரையோரத்தில் போட்டோஷூட் நடத்தினர். அப்போது கரையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தனர்.

இதில் ரெஜில் பாறைகளில் அடிப்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கார்த்திகாவை மீட்டு மலபார் மருத்துமனையில் சேர்ந்துள்ளனர். அவரும் கவலைக்கிடமாக இருப்பதாகக் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் ஆற்றில் போட்டோஷூட் முடித்த பின்னர் இருவரும் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணமான மூன்றே மாதத்தில் இளம் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!

திருவனந்தபுரம் : கேரளாவில் வெட்டிங் போட்டோஷூட் மீது அதீத மோகம் எழுந்துள்ளது. புதுமண தம்பதிகளும் திருமணத்திற்கு முந்தைய போட்டோசூட், பிந்தைய போட்டோசூட் என்று விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிப்பதும், இந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகள் பெறுவதில் ஆர்வம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

விபரீத வெட்டிங் போட்டோஷூட்: இதற்கேறப் போட்டோகிராபர்களும் தினுசு தினுசான ஐடியாக்களுடன் தம்பதிகளை அணுகிவருகின்றனர். அந்த வகையில் தம்பதிகளை ஆற்றின் நடுவே நிற்கவைத்து போட்டோ எடுப்பது, மலையின் உச்சியில் நிற்க வைத்து போட்டோ எடுப்பது, பைக்குகளில் சாகசம் காட்டும்படி போட்டோ எடுப்பது போன்ற விபரீத வெட்டிங் போட்டோஷூட்கள் நடந்துவருகின்றன.

வாழ்க்கையை பறித்த போட்டோஷூட்: இந்த போட்டோஷூட்கள் அவ்வப்போது சில தம்பதிகளில் வாழ்க்கையை பறித்துவிடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி கேரள மாநிலத்தில் திருமணமாகிய ஒரே மாதத்தில் தம்பதிக்கு போட்டோசூட்டின்போது ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றங்கரையோரத்தில் போட்டோஷூட்: கேரள மாநிலம் கோழிக்கோடு கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில்-கார்த்திகா என்ற புதுமண தம்பதி, திருமணத்திற்கு பிந்தைய போட்டோசூட் நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி இன்று (ஏப். 4) குட்டியாடி ஆற்றங்கரையோரத்தில் போட்டோஷூட் நடத்தினர். அப்போது கரையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தனர்.

இதில் ரெஜில் பாறைகளில் அடிப்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கார்த்திகாவை மீட்டு மலபார் மருத்துமனையில் சேர்ந்துள்ளனர். அவரும் கவலைக்கிடமாக இருப்பதாகக் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் ஆற்றில் போட்டோஷூட் முடித்த பின்னர் இருவரும் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணமான மூன்றே மாதத்தில் இளம் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.