ETV Bharat / bharat

Joshimath Update: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் - அரசு அறிவிப்பு

author img

By

Published : Jan 11, 2023, 10:35 PM IST

உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் நில வெடிப்பு காரணமாக விரிசல் ஏற்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடி உதவியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Joshimath
Joshimath

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களை வீரர்கள் இடித்து அகற்றினர். இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து வரும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.

சம்பவ இடத்தை பார்வைட்யிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நில வெடிப்பால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தவிக்கும் பொது மக்களுக்கு இடைக்கால உடனடி உதவியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

  • "हमारी सरकार स्थानीय लोगों के हितों का पूरा ध्यान रख रही है। भू-धंसाव से जो स्थानीय लोग प्रभावित हुए हैं उनको बाजार दर पर मुआवजा दिया जाएगा। बाजार की दर हितधारकों के सुझाव लेकर और जनहित में ही तय की जाएगी।" : श्री @pushkardhami जी

    — Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"हमारी सरकार स्थानीय लोगों के हितों का पूरा ध्यान रख रही है। भू-धंसाव से जो स्थानीय लोग प्रभावित हुए हैं उनको बाजार दर पर मुआवजा दिया जाएगा। बाजार की दर हितधारकों के सुझाव लेकर और जनहित में ही तय की जाएगी।" : श्री @pushkardhami जी

— Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) January 11, 2023

இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரின் செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறியதாவது, நில அதிர்வால் இரு பெரிய உணவு விடுதிகளில் விரிசல் ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாகவும், கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர வேறு எந்த கட்டடங்களும் இடிக்கப்படவில்லை என்றார்.

அபாயகரமான கட்டடங்களில் குடியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், நில வெடிப்பால் விரிசல் ஏற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களின் கணக்கு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.

வீடு மாறுதலுக்கு 50 ஆயிரம் ரூபாய் முன்தொகையாகவும், மீதமுள்ள 1 லட்சம் ரூபாய் பேரிடர் நிதியில் இருந்தும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மக்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தருவதாகவும், வாடகை வீடுகளில் வசிக்க விரும்பும் மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

முன்னதாக 723 கட்டடங்கள் விரிசில் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நலன் கருதி 131 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நம்ம மெட்ரோ விபத்து - 5 பேர் மீது வழக்கு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களை வீரர்கள் இடித்து அகற்றினர். இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து வரும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.

சம்பவ இடத்தை பார்வைட்யிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நில வெடிப்பால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தவிக்கும் பொது மக்களுக்கு இடைக்கால உடனடி உதவியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

  • "हमारी सरकार स्थानीय लोगों के हितों का पूरा ध्यान रख रही है। भू-धंसाव से जो स्थानीय लोग प्रभावित हुए हैं उनको बाजार दर पर मुआवजा दिया जाएगा। बाजार की दर हितधारकों के सुझाव लेकर और जनहित में ही तय की जाएगी।" : श्री @pushkardhami जी

    — Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரின் செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறியதாவது, நில அதிர்வால் இரு பெரிய உணவு விடுதிகளில் விரிசல் ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாகவும், கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர வேறு எந்த கட்டடங்களும் இடிக்கப்படவில்லை என்றார்.

அபாயகரமான கட்டடங்களில் குடியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், நில வெடிப்பால் விரிசல் ஏற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களின் கணக்கு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.

வீடு மாறுதலுக்கு 50 ஆயிரம் ரூபாய் முன்தொகையாகவும், மீதமுள்ள 1 லட்சம் ரூபாய் பேரிடர் நிதியில் இருந்தும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மக்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தருவதாகவும், வாடகை வீடுகளில் வசிக்க விரும்பும் மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

முன்னதாக 723 கட்டடங்கள் விரிசில் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நலன் கருதி 131 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நம்ம மெட்ரோ விபத்து - 5 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.