ETV Bharat / bharat

கனடா மக்களுக்கான விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 5:23 PM IST

India suspends Visa issuance to Canadian citizens: இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

india-india-suspends-visa-issuance-to-canadian-citizens-amidst-escalating-tensions-over-alleged-intelligence-links-to-sikh-terrorists-murder
கனடா மக்களுக்கான விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா!

டெல்லி: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவத் தொடங்கியது.

இதனையடுத்து மறுஉத்தரவு வரும் வரை விசா வழங்குவதை நிறுத்துவதற்கான முடிவை இந்திய அரசு அறிவித்துள்ளது. விசா குறித்த விபரங்கள் BLS இன்டர்நேஷனல் இணையதளத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதம் இருக்கும் மத சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரிக்கையினால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனை இந்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின் தற்போது சமீபத்தில் இந்த பிரச்னை மீண்டு தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய சுதந்திரத்திற்கான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜீன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

மேலும் உடனடியாக கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்தும் கனடா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்திய அரசு கனடாவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவுப் படைகளுடன் இணைந்து செயல்பட்ட வந்த சுக்தூல் சிங் கனடாவில் வின்னிபெக் பகுதியில் இரு குழுவினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனையடுத்து, மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. இதனையடுத்து, இந்திய விசா நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கனடா மக்களுக்கான விசா சேவைகளை இந்திய அரசு நிறுத்தியது, உலக அளவில் பேசும் பொருளாக மாறிவுள்ளது. தற்போது இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை வேண்டும் என கனடா அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தியா தற்போது விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா - கனடா இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு: கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி!

டெல்லி: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவத் தொடங்கியது.

இதனையடுத்து மறுஉத்தரவு வரும் வரை விசா வழங்குவதை நிறுத்துவதற்கான முடிவை இந்திய அரசு அறிவித்துள்ளது. விசா குறித்த விபரங்கள் BLS இன்டர்நேஷனல் இணையதளத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதம் இருக்கும் மத சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரிக்கையினால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனை இந்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின் தற்போது சமீபத்தில் இந்த பிரச்னை மீண்டு தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய சுதந்திரத்திற்கான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜீன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

மேலும் உடனடியாக கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்தும் கனடா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்திய அரசு கனடாவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவுப் படைகளுடன் இணைந்து செயல்பட்ட வந்த சுக்தூல் சிங் கனடாவில் வின்னிபெக் பகுதியில் இரு குழுவினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனையடுத்து, மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. இதனையடுத்து, இந்திய விசா நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கனடா மக்களுக்கான விசா சேவைகளை இந்திய அரசு நிறுத்தியது, உலக அளவில் பேசும் பொருளாக மாறிவுள்ளது. தற்போது இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை வேண்டும் என கனடா அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தியா தற்போது விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா - கனடா இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு: கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.