ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 204 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் பாதித்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 158ஆக அதிகரித்துள்ளது. கடந்த 147 நாள்களில் மிகக்குறைந்த அளவாக கரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. நேற்று (ஆக.09) தொற்றிலிருந்து 41 ஆயிரத்து 511 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 968 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மாநிலத்தில் மொத்தமாக 4 லட்சத்து 28 அயிரத்து 682 பேர் உயிரிழந்த நிலையில், 3 லட்சத்து 88 ஆயிரத்து 580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 48 கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 545 கரோனா டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி வெளிநாட்டவருக்கும் தடுப்பூசி - மத்திய சுகாதாரத் துறை