ETV Bharat / bharat

கனமழை: கர்நாடகாவில் வெள்ளப்பெருக்கு

author img

By

Published : Jul 23, 2021, 7:52 PM IST

கர்நாடகாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது.

Flood
கர்நாடகா

தென்மேற்குப் பருவமழை காரணமாக, வரும் 26ஆம் தேதிவரை கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. மாநிலத்தில் கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 23) ரெட் அலர்ட்டும், ஜூலை 24 முதல் 26ஆம் தேதிவரை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே, கர்நாடகாவில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், பல ஆறுகளும், ஏரிகளும் நிறைவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடர் உருவாகியுள்ளது.

குறிப்பாக கர்வார், சிர்ஸி, மைசூரு, தர்வாட், பெல்காவி, பாகல்கோட், விஜயபுரா பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், யல்லாபூரில் உள்ள ஷெர்லி அருவிக்குச் சென்ற ஆறு பேர் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

விஜயபுராவில் மகாராஷ்டிராவிற்குச் சென்ற பேருந்து வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்த 19 பயணிகளை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்

தென்மேற்குப் பருவமழை காரணமாக, வரும் 26ஆம் தேதிவரை கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. மாநிலத்தில் கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 23) ரெட் அலர்ட்டும், ஜூலை 24 முதல் 26ஆம் தேதிவரை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே, கர்நாடகாவில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், பல ஆறுகளும், ஏரிகளும் நிறைவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடர் உருவாகியுள்ளது.

குறிப்பாக கர்வார், சிர்ஸி, மைசூரு, தர்வாட், பெல்காவி, பாகல்கோட், விஜயபுரா பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், யல்லாபூரில் உள்ள ஷெர்லி அருவிக்குச் சென்ற ஆறு பேர் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

விஜயபுராவில் மகாராஷ்டிராவிற்குச் சென்ற பேருந்து வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்த 19 பயணிகளை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.