ETV Bharat / bharat

ஹரியானா தனியார் வேலைவாய்ப்பு சட்டம் பிற்போக்குதனமானது- கபில் சிபல்

author img

By

Published : Mar 5, 2021, 1:40 PM IST

ஹரியானா தனியார் வேலைவாய்ப்பு சட்டம் பிற்போக்குதனமானது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு  Kapil sibal  Haryana's Quota Law  Quota Law  கபில் சிபல்  ஹரியானா தனியார் வேலைவாய்ப்பு சட்டம்
தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு Kapil sibal Haryana's Quota Law Quota Law கபில் சிபல் ஹரியானா தனியார் வேலைவாய்ப்பு சட்டம்

டெல்லி: ஹரியானாவில் இயற்றப்பட்டுள்ள தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு சட்டம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனியார் வேலைவாய்ப்பில் 75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தால் குர்ஹாமில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குர்ஹாமில் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் தொழில்கள் காரணமாக, இந்தப் பகுதி மாநிலத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நகராகவும் விளங்கிவருகிறது.

இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், “தனியார் நிறுவனங்கள் குறித்த ஹரியானா இடஒதுக்கீடு சட்டம் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படக்கூடியது. பிற்போக்குதனமானது, நடைமுறைக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்தித்து, உள்ளூரில் செயல்பட சொல்கிறார்.. கட்டார், லோக்கலாக சிந்தித்து, லோக்கலாகவே இருக்கும்படி செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி அரசுடன் கலந்தாலோசித்து எல்லை திறப்பது குறித்து முடிவு

டெல்லி: ஹரியானாவில் இயற்றப்பட்டுள்ள தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு சட்டம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனியார் வேலைவாய்ப்பில் 75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தால் குர்ஹாமில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குர்ஹாமில் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் தொழில்கள் காரணமாக, இந்தப் பகுதி மாநிலத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நகராகவும் விளங்கிவருகிறது.

இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், “தனியார் நிறுவனங்கள் குறித்த ஹரியானா இடஒதுக்கீடு சட்டம் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படக்கூடியது. பிற்போக்குதனமானது, நடைமுறைக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்தித்து, உள்ளூரில் செயல்பட சொல்கிறார்.. கட்டார், லோக்கலாக சிந்தித்து, லோக்கலாகவே இருக்கும்படி செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி அரசுடன் கலந்தாலோசித்து எல்லை திறப்பது குறித்து முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.