தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
கடின உழைப்பினால், 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வு பெற்றார். கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் தலைமை செயல் அலுவலராகவும் (சிஇஓ) ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

48 வயதான இவருக்கு, 2019ஆம் ஆண்டிலே ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,136 கோடி) வழங்கப்பட்டது. எனவே, தற்போது சம்பளம் இரட்டிப்பு ஆகியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
சுந்தர் பிச்சையின் சொத்தின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டாலர் ஆகும் எனக் கூறப்படுகிறது. சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலியைச் சந்தித்தார்.
அஞ்சலி அவரின் வகுப்பில் படித்தவர். இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு காவ்யா, கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

டெக் உலகத்தின் மீதான காதலினாலும், கோடிங் ஆர்வத்திலும் படிப்படியாக முன்னேறி எட்ட முடியாத உயரத்தைத் தொட்டுள்ளார்.
உலகையே கூகுள் ஆண்டாலும், அந்த கூகுளை ஆளும் தமிழனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு சமூக வலைதளத்தில் பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் டிக்டாக், விசாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்