ETV Bharat / bharat

குடிசைக்குள் புகுந்த கார் - 4 பேர் பலி

தெலங்கான கரீம்நகரில் குடிசைக்குள் கார் புகுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Jan 31, 2022, 6:39 AM IST

தெலுங்கான கரீம்நகர் குடிசை விபத்து - நான்கு பேர் கைது
தெலுங்கான கரீம்நகர் குடிசை விபத்து - நான்கு பேர் கைது

கரீம்நகர்: கரீம்நகரில் விபத்து நடந்ததையடுத்து சில மணி நேரங்களில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை காவல் துறையினர் பிடித்தனர். ஆனால் அவர் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது.

காரை ஓட்டியவருடன் இருந்த மற்ற மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களும் 18 வயதுக்கு குறைவானவர்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலை கரீம்நகர் நகரில் உள்ள கமான் பகுதியில் உள்ள குடிசை மீது திடீரென்று கார் ஒன்று மோதியது. அதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற கரீம் நகர் காவல் துறையினர் காயம் அடைந்தோரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபரீத்,லலிதா, சுனிதா மற்றும் ஜோதி ஆகிய பெண்கள் இறந்தனர்.

மகனை காக்க முயன்ற தந்தை

இதனையடுத்து கரீம்நகர் காவல் ஆனையர் சத்யநாரயணன் கூறுகையில், “ கார் உரிமயாளர் ராஜேந்திரா மற்றும் அவரது மகன் அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பிறகு ராஜேந்திரன் அவரது 16 வயது மகனை தப்பிக்க வைத்து, தான் கார் ஓட்டியதாக போலீசிடம் சரணடைந்துள்ளார்.

தனது மகனை காப்பாற்ற தான் கார் ஓட்டியதாக பொய் கூறியது தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார். மேலும் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளது என தெரிந்தது.

இதையும் படிங்க:குடிசையில் மோதிய கார்... 4 பெண்கள் உயிரிழப்பு!

கரீம்நகர்: கரீம்நகரில் விபத்து நடந்ததையடுத்து சில மணி நேரங்களில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை காவல் துறையினர் பிடித்தனர். ஆனால் அவர் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது.

காரை ஓட்டியவருடன் இருந்த மற்ற மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களும் 18 வயதுக்கு குறைவானவர்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலை கரீம்நகர் நகரில் உள்ள கமான் பகுதியில் உள்ள குடிசை மீது திடீரென்று கார் ஒன்று மோதியது. அதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற கரீம் நகர் காவல் துறையினர் காயம் அடைந்தோரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபரீத்,லலிதா, சுனிதா மற்றும் ஜோதி ஆகிய பெண்கள் இறந்தனர்.

மகனை காக்க முயன்ற தந்தை

இதனையடுத்து கரீம்நகர் காவல் ஆனையர் சத்யநாரயணன் கூறுகையில், “ கார் உரிமயாளர் ராஜேந்திரா மற்றும் அவரது மகன் அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பிறகு ராஜேந்திரன் அவரது 16 வயது மகனை தப்பிக்க வைத்து, தான் கார் ஓட்டியதாக போலீசிடம் சரணடைந்துள்ளார்.

தனது மகனை காப்பாற்ற தான் கார் ஓட்டியதாக பொய் கூறியது தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார். மேலும் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளது என தெரிந்தது.

இதையும் படிங்க:குடிசையில் மோதிய கார்... 4 பெண்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.