ETV Bharat / bharat

அஸ்ஸாம் கனமழை... 2 லட்சம் பேர் பாதிப்பு... 652 கிராமங்களில் வெள்ளம்...

author img

By

Published : May 17, 2022, 4:10 PM IST

Updated : May 17, 2022, 4:20 PM IST

அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 20 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

floods-affect-nearly-2-lakh-people-in-assam
floods-affect-nearly-2-lakh-people-in-assam

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. பிரம்மபுத்திரா, கொபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்டங்களை சேர்ந்த 652 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டன. 16 ஆயிரத்து 645 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கின. 300 வீடுகள் மூழ்கின.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 7 மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் 32,959 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களிலும் சாலைகள், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.

அசாம் மாநிலத்திலிருந்து மணிப்பூர், திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் பயணிகளுடன் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சிக்கள்ளி தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம்

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. பிரம்மபுத்திரா, கொபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்டங்களை சேர்ந்த 652 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டன. 16 ஆயிரத்து 645 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கின. 300 வீடுகள் மூழ்கின.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 7 மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் 32,959 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களிலும் சாலைகள், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.

அசாம் மாநிலத்திலிருந்து மணிப்பூர், திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் பயணிகளுடன் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சிக்கள்ளி தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம்

Last Updated : May 17, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.