ETV Bharat / bharat

என் படுக்கையில் நீ எப்படிப் படுக்கலாம்? - மருத்துவமனையில் அரங்கேறிய கொலை

author img

By

Published : Apr 12, 2021, 8:12 AM IST

லக்னோ: மருத்துவமனையில் தனது படுக்கையை ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு நபரை, 35 வயதான நபர் ஒருவர், கொடூரமாகத் தாக்கி கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP hospital
லக்னோ

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், அப்துல் ரஷ்மான் என்பவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கழிவறை சென்றுவிட்டுத் திரும்பிய அப்துல், மருத்துவமனையில் தான் படுத்திருந்த படுக்கையில் வேறு ஒரு நபர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், படுக்கையிலிருந்த நபரை, கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி கொலைசெய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்துல்லை கைதுசெய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவமனையில் அரங்கேறிய கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை - போக்சோவில் மூவர் கைது

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், அப்துல் ரஷ்மான் என்பவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கழிவறை சென்றுவிட்டுத் திரும்பிய அப்துல், மருத்துவமனையில் தான் படுத்திருந்த படுக்கையில் வேறு ஒரு நபர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், படுக்கையிலிருந்த நபரை, கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி கொலைசெய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்துல்லை கைதுசெய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவமனையில் அரங்கேறிய கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை - போக்சோவில் மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.