சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 11 வயது மகளை ஒரு ஆண்டுக்கும் மேலாக பாலியல் வன்புணர்வு செய்து வந்த தந்தை இன்று (டிசம்பர் 3) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குரு அமர்தாஸ் நகரில் நடந்துள்ளது. இதுகுறித்து லூதியானா போலீசார் கூறுகையில், குரு அமர்தாஸ் நகரை சேர்ந்த 11 வயது சிறுமி அவரது தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுவருவதாக சமூக செயற்பாட்டாளர் மந்தீப் கவுர் என்பவர் புகார் அளித்தார். இவருக்கு சிறுமியின் பக்கத்துவீட்டார் சமூக வலைதளம் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது தந்தையை கைது செய்தோம். இதற்கு வீட்டில் உள்ள பெண்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியை யாருடனும் பேச அனுமதிக்காமல் இருந்துள்ளனர். குறிப்பாக ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சொத்துக்காக கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மனைவி