ETV Bharat / bharat

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்கள் முடக்கம்!

author img

By

Published : Apr 30, 2022, 5:33 PM IST

ஜியோமி இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கை
அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி: சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் ஜியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் ரூ.5551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் இன்று (ஏப்ரல் 30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜியேமி இந்தியா நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அந்நிறுவத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜியேமி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் தனது நிறுவனத்தை தொடங்கியது. அதன்பின்னர் அடுத்த ஆண்டு முதல் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய ரூபாயின்படி 5,551.27 கோடி ரூபாயை ராயல்டி என்ற பெயரில் ஜியேமி குழும நிறுவனம் உள்பட மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகை தலைமை நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கை
அமலாக்கத்துறை நடவடிக்கை

ஜியேமி இந்தியா நிறுவனம் செல்போன் உள்ளிட்ட பிற பொருள்கள் தயாரிப்புக்கு இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து பொருள்கள் வாங்கும் நிலையில், இந்த மூன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜியேமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய போது வங்கிகளிடம் தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக, ஜியோமி நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவர் மனு குமார் ஜெயினிடம் இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் பெங்களூருவில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 45 ஆயிரம் கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றம்!

டெல்லி: சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் ஜியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் ரூ.5551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் இன்று (ஏப்ரல் 30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜியேமி இந்தியா நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அந்நிறுவத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜியேமி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் தனது நிறுவனத்தை தொடங்கியது. அதன்பின்னர் அடுத்த ஆண்டு முதல் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய ரூபாயின்படி 5,551.27 கோடி ரூபாயை ராயல்டி என்ற பெயரில் ஜியேமி குழும நிறுவனம் உள்பட மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகை தலைமை நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கை
அமலாக்கத்துறை நடவடிக்கை

ஜியேமி இந்தியா நிறுவனம் செல்போன் உள்ளிட்ட பிற பொருள்கள் தயாரிப்புக்கு இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து பொருள்கள் வாங்கும் நிலையில், இந்த மூன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜியேமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய போது வங்கிகளிடம் தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக, ஜியோமி நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவர் மனு குமார் ஜெயினிடம் இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் பெங்களூருவில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 45 ஆயிரம் கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.