ETV Bharat / bharat

செந்தில் பாலாஜி வழக்கு: காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்!

author img

By

Published : Jul 28, 2023, 7:12 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

செந்தில் பாலாஜி வழக்கு- காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வாதம்!
செந்தில் பாலாஜி வழக்கு- காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வாதம்!

டெல்லி: பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 27) மீண்டும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

இந்த வழக்கில், தன்னை கைது செய்து உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ள மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று, 2002ஆம் ஆண்டு வெளியான விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் போலீஸ் காவலுக்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் கருதினால், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் என்று உச்ச நீதிமன்றம் கூற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்து உள்ளார்.

புலனாய்வு அமைப்புக்கு கிடைக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள், காவல் துறையினரின் அதிகாரங்களை தொடர்ந்து அனுபவித்தால் கடுமையான சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.

சுங்கச் சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) ஆகியவற்றின் விதிகளைப் பற்றி குறிப்பிட்ட கபில் சிபல், இந்த இரண்டு சட்டங்களின் கீழ் ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்று வாதிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை, மாநில காவலில் வைத்து விசாரணை நடத்துகிறதே தவிர, சுங்க அதிகாரிகள் அல்ல. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கபில் சிபல் தெரிவித்து உள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் முன்னறிவிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டம் இயற்றும் நோக்கம் தெளிவாக உள்ளது மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியின் குறிப்பிட்ட அதிகாரங்கள், சில சிறப்புச் சட்டங்களின் கீழ் மற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் துறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் PMLA சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார். அரசியல் அறிக்கைகளை வெளியிடாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நம்மை கட்டுப்படுத்திக்கொள்வோம் என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 2ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

2022ஆம் ஆண்டில், விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்தத் தீர்ப்பில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கைது செய்தல், பணமோசடியில் ஈடுபட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தல், தேடுதல் மற்றும் பறிமுதல் செய்தல் தொடர்பான அமலாக்கத் துறையின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

எவ்வாறாயினும், 2002 சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் "போலீஸ் அதிகாரிகள் அல்ல" என்றும், அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (ECIR) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) கீழ் முதல் தகவல் அறிக்கை உடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, 2022ஆம் ஆண்டின் தீர்ப்பு பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்றும், எனவே கைது மற்றும் காவலில் விசாரணை செய்வது தொடர்பாக காவல் துறைக்கு இருக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.

பணமோசடி தடுப்பு அமைப்பு, காவலில் உள்ள அமைச்சரிடம் விசாரணை நடத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மட்டுமே விசாரணை அமைப்புக்கு அவகாசம் உள்ளதால், மனுவை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்து இருந்தார்.. சிஆர்பிசியின் 167வது பிரிவின் கீழ் விசாரணையை முடிக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 60 நாட்கள் அவகாசம் ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பணமோசடி வழக்கில், புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜூலை 14ஆம் தேதி உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம், ஜூலை 21ஆம் தேதி அமலாக்கத் துறையின் பதிலைக் கேட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சரும் அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். அமைச்சரின் கைது நடவடிக்கையை உறுதி செய்ததோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பண மோசடி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

ஏஜென்சி அதிகாரிகளுக்கு கைது செய்ய உரிமை உண்டு என்று சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகள் அமர்வில் தெரிவித்து இருந்தார். அமலாக்கத்துறை, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவதற்காக மட்டுமே ஒருவரைக் கைது செய்யும் சூழ்நிலை இருக்க முடியாது, ஏனெனில் கைது செய்வதன் நோக்கமே விசாரணை நோக்கத்திற்காக உள்ளது, என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

டெல்லி: பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 27) மீண்டும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

இந்த வழக்கில், தன்னை கைது செய்து உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ள மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று, 2002ஆம் ஆண்டு வெளியான விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் போலீஸ் காவலுக்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் கருதினால், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் என்று உச்ச நீதிமன்றம் கூற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்து உள்ளார்.

புலனாய்வு அமைப்புக்கு கிடைக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள், காவல் துறையினரின் அதிகாரங்களை தொடர்ந்து அனுபவித்தால் கடுமையான சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.

சுங்கச் சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) ஆகியவற்றின் விதிகளைப் பற்றி குறிப்பிட்ட கபில் சிபல், இந்த இரண்டு சட்டங்களின் கீழ் ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்று வாதிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை, மாநில காவலில் வைத்து விசாரணை நடத்துகிறதே தவிர, சுங்க அதிகாரிகள் அல்ல. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கபில் சிபல் தெரிவித்து உள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் முன்னறிவிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டம் இயற்றும் நோக்கம் தெளிவாக உள்ளது மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியின் குறிப்பிட்ட அதிகாரங்கள், சில சிறப்புச் சட்டங்களின் கீழ் மற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் துறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் PMLA சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார். அரசியல் அறிக்கைகளை வெளியிடாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நம்மை கட்டுப்படுத்திக்கொள்வோம் என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 2ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

2022ஆம் ஆண்டில், விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்தத் தீர்ப்பில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கைது செய்தல், பணமோசடியில் ஈடுபட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தல், தேடுதல் மற்றும் பறிமுதல் செய்தல் தொடர்பான அமலாக்கத் துறையின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

எவ்வாறாயினும், 2002 சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் "போலீஸ் அதிகாரிகள் அல்ல" என்றும், அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (ECIR) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) கீழ் முதல் தகவல் அறிக்கை உடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, 2022ஆம் ஆண்டின் தீர்ப்பு பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்றும், எனவே கைது மற்றும் காவலில் விசாரணை செய்வது தொடர்பாக காவல் துறைக்கு இருக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.

பணமோசடி தடுப்பு அமைப்பு, காவலில் உள்ள அமைச்சரிடம் விசாரணை நடத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மட்டுமே விசாரணை அமைப்புக்கு அவகாசம் உள்ளதால், மனுவை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்து இருந்தார்.. சிஆர்பிசியின் 167வது பிரிவின் கீழ் விசாரணையை முடிக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 60 நாட்கள் அவகாசம் ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பணமோசடி வழக்கில், புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜூலை 14ஆம் தேதி உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம், ஜூலை 21ஆம் தேதி அமலாக்கத் துறையின் பதிலைக் கேட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சரும் அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். அமைச்சரின் கைது நடவடிக்கையை உறுதி செய்ததோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பண மோசடி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

ஏஜென்சி அதிகாரிகளுக்கு கைது செய்ய உரிமை உண்டு என்று சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகள் அமர்வில் தெரிவித்து இருந்தார். அமலாக்கத்துறை, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவதற்காக மட்டுமே ஒருவரைக் கைது செய்யும் சூழ்நிலை இருக்க முடியாது, ஏனெனில் கைது செய்வதன் நோக்கமே விசாரணை நோக்கத்திற்காக உள்ளது, என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.