ETV Bharat / bharat

இறந்த உடலுக்கு சடங்குகள்...வியக்க வைக்கும் விநோத பழக்கம்

author img

By

Published : Aug 22, 2022, 9:27 AM IST

இறந்தவர்களை அடக்கம் செய்ய பணம் சேர்க்கும் வரை அவர்கள் உடலை பாதுகாக்கும் ட்ரோஜன் மக்கள் பற்றியும், அந்த உடலுக்கு அவர்கள் நடத்தும் சடங்கு பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

இறந்த உடலுக்கு சடங்குகள்...வியக்க வைக்கும் விநோத பழக்கம்
இறந்த உடலுக்கு சடங்குகள்...வியக்க வைக்கும் விநோத பழக்கம்

டிகாலா (இந்தோனேசியா): இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் 1 மில்லியன் ட்ரோஜன் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ட்ரோஜன் இன மக்களின் ’மநெநெ’ சடங்கை இங்குவரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இறந்து போன தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை மகிழ்விப்பதற்காக இந்த மக்கள் இறந்த உடலுக்கு புத்தாடை அணிவிப்பது, அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பது போன்றவைகளை செய்கின்றனர்.

சுலவெசி தீவில் உள்ள இரண்டு சிறிய நகரங்களில், ’மநெநெ’ சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக டோரியா கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை வெளியே எடுத்து ஆடை அணிவித்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்த விசயங்கள் செய்யப்படுகிறது. இதுகுறித்து சுல்லே டோசே கூறியதாவது "நாங்கள் மாநெநெ வைச் செய்யும்போது, ​​கல்லறை அறையைத் திறந்து அதையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்வோம். பின்னர், ஆடைகளை மாற்றுவதற்கு முன், உடல்களை சூரிய ஒளியில் உலர்த்துவோம்," என்று கூறினார்.

தங்கள் விருப்பப்படும் உறவினர்களை அழைத்து விமர்சையாக திருமணம் செய்வதற்கு நமது பெற்றோர்கள் பல ஆண்டுகளாக பணம் சேர்த்து வைப்பது வழக்கம். அது போல் இந்த சுலவெசி தீவில் வசிக்கும் ட்ரோஜன் மக்கள் தங்கள் முனோர்களுக்கு தங்கள் பாரம்பரிய வழக்கப்படி விமரிசையாக இறுதிசடங்கு செய்ய போதிய பணம் இல்லாத பட்சத்தில் தேவையான பணம் சேர்க்கும் வரை அதற்கென பிரத்யேகமாக உள்ள மலை பாறை கல்லறைகளில் வைத்து பின் மநெநெ சடங்கில் அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர்.

முன்னோர்களின் பாதுகாக்கப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சவப்பெட்டிகள் மலைப்பகுதியில் இதற்கென பிரத்யேகமாக செதுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. " இறந்தவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் செய்யும் இந்த சடங்குமுறைகள் அவர்கள் நன்றியின் அடையாளமாகும். அவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆவிகளை மதிக்கிறார்கள். இதனால் முன்னோர்கள் இவர்களின் பாதுகாப்பான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கிறார்கள் என நம்புகின்றனர்," என்று டோரியா கிராமத்தின் தலைவர் ரஹ்மான் பாதுஸ் கூறினார்.

ஒரு குடும்பம் புதிதாக கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட தங்கள் உறவினருக்கு ஒரு சிகரெட்டை வழங்கியது. மற்றொரு குடும்பம் உறவினர் உடலுக்கு ஒரு ஸ்டைலான சன்கிளாஸ் பொருத்தியது. இந்த சடங்கிற்காக பிரத்யேகமாக இருக்கும் கல்லறையில் இருந்து எடுக்கப்படும் பெரும்பாலான உடல்கள் மம்மிகள் போலவே உள்ளன. சில உடல்கள் எலும்புக்கூடுகளாக சிதைந்து போயுள்ளன.

எம்பாமிங் செய்யப்பட்ட சடலத்துடன் பேசுவது, அவர்களை அலங்கரிப்பது, தலைமுடியை சீவி அலங்கரிப்பது, மம்மிஃபிகேஷன் செய்யப்பட்ட உறவினருடன் புகைப்படம் எடுப்பது போன்றவை நடக்கக்கூடிய இந்த மநெநெ சடங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். இறந்தவர்கள் உடலுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையாவது சடங்கு செய்ய வேண்டும் என்பது இம்மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கம்.

இறந்தவர்களின் ஆவிகள் இறுதிச் சடங்குகளுக்கு முன் உலகில் தங்கியிருக்கும் என்றும், பின் ஆவிகளின் தேசத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கும் என்றும் ட்ரோஜன்கள் நம்புகிறார்கள். பாரம்பரிய முறைப்படியான இறுதிச்சடங்கிற்கு போதுமான பணத்தைச் சேமிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்யாமல் அதற்கென பிரத்யேகமான மலை பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கும் கல்லறைகளில் பாதுகாப்பார்கள்.

இறந்தவர்கள் உடல்கள் முன்பு வினிகர் மற்றும் தேயிலை இலைகள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு எம்பாமிங் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல குடும்பங்கள் ஃபார்மால்டிஹைட் கரைசலை பயன்படுத்தி எம்பாமிங் செய்கின்றனர். ட்ரோஜன் மக்களின் இந்த சடங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. ஆனால் இம்மக்கள் உடல்களை சுத்தம் செய்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்தனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

”பல உள்ளூர்வாசிகள் தற்போது கிராமத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். மநெநெ சடங்கில் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். உறவினர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு முறைப்படி சடங்குகள் செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து கஷ்ட்டங்களில் இருந்து தங்களை காப்பார்கள்” என கிராமவாசி படூஸ் கூறினார்.

இதையும் படிங்க: 25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்

டிகாலா (இந்தோனேசியா): இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் 1 மில்லியன் ட்ரோஜன் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ட்ரோஜன் இன மக்களின் ’மநெநெ’ சடங்கை இங்குவரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இறந்து போன தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை மகிழ்விப்பதற்காக இந்த மக்கள் இறந்த உடலுக்கு புத்தாடை அணிவிப்பது, அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பது போன்றவைகளை செய்கின்றனர்.

சுலவெசி தீவில் உள்ள இரண்டு சிறிய நகரங்களில், ’மநெநெ’ சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக டோரியா கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை வெளியே எடுத்து ஆடை அணிவித்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்த விசயங்கள் செய்யப்படுகிறது. இதுகுறித்து சுல்லே டோசே கூறியதாவது "நாங்கள் மாநெநெ வைச் செய்யும்போது, ​​கல்லறை அறையைத் திறந்து அதையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்வோம். பின்னர், ஆடைகளை மாற்றுவதற்கு முன், உடல்களை சூரிய ஒளியில் உலர்த்துவோம்," என்று கூறினார்.

தங்கள் விருப்பப்படும் உறவினர்களை அழைத்து விமர்சையாக திருமணம் செய்வதற்கு நமது பெற்றோர்கள் பல ஆண்டுகளாக பணம் சேர்த்து வைப்பது வழக்கம். அது போல் இந்த சுலவெசி தீவில் வசிக்கும் ட்ரோஜன் மக்கள் தங்கள் முனோர்களுக்கு தங்கள் பாரம்பரிய வழக்கப்படி விமரிசையாக இறுதிசடங்கு செய்ய போதிய பணம் இல்லாத பட்சத்தில் தேவையான பணம் சேர்க்கும் வரை அதற்கென பிரத்யேகமாக உள்ள மலை பாறை கல்லறைகளில் வைத்து பின் மநெநெ சடங்கில் அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர்.

முன்னோர்களின் பாதுகாக்கப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சவப்பெட்டிகள் மலைப்பகுதியில் இதற்கென பிரத்யேகமாக செதுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. " இறந்தவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் செய்யும் இந்த சடங்குமுறைகள் அவர்கள் நன்றியின் அடையாளமாகும். அவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆவிகளை மதிக்கிறார்கள். இதனால் முன்னோர்கள் இவர்களின் பாதுகாப்பான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கிறார்கள் என நம்புகின்றனர்," என்று டோரியா கிராமத்தின் தலைவர் ரஹ்மான் பாதுஸ் கூறினார்.

ஒரு குடும்பம் புதிதாக கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட தங்கள் உறவினருக்கு ஒரு சிகரெட்டை வழங்கியது. மற்றொரு குடும்பம் உறவினர் உடலுக்கு ஒரு ஸ்டைலான சன்கிளாஸ் பொருத்தியது. இந்த சடங்கிற்காக பிரத்யேகமாக இருக்கும் கல்லறையில் இருந்து எடுக்கப்படும் பெரும்பாலான உடல்கள் மம்மிகள் போலவே உள்ளன. சில உடல்கள் எலும்புக்கூடுகளாக சிதைந்து போயுள்ளன.

எம்பாமிங் செய்யப்பட்ட சடலத்துடன் பேசுவது, அவர்களை அலங்கரிப்பது, தலைமுடியை சீவி அலங்கரிப்பது, மம்மிஃபிகேஷன் செய்யப்பட்ட உறவினருடன் புகைப்படம் எடுப்பது போன்றவை நடக்கக்கூடிய இந்த மநெநெ சடங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். இறந்தவர்கள் உடலுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையாவது சடங்கு செய்ய வேண்டும் என்பது இம்மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கம்.

இறந்தவர்களின் ஆவிகள் இறுதிச் சடங்குகளுக்கு முன் உலகில் தங்கியிருக்கும் என்றும், பின் ஆவிகளின் தேசத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கும் என்றும் ட்ரோஜன்கள் நம்புகிறார்கள். பாரம்பரிய முறைப்படியான இறுதிச்சடங்கிற்கு போதுமான பணத்தைச் சேமிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்யாமல் அதற்கென பிரத்யேகமான மலை பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கும் கல்லறைகளில் பாதுகாப்பார்கள்.

இறந்தவர்கள் உடல்கள் முன்பு வினிகர் மற்றும் தேயிலை இலைகள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு எம்பாமிங் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல குடும்பங்கள் ஃபார்மால்டிஹைட் கரைசலை பயன்படுத்தி எம்பாமிங் செய்கின்றனர். ட்ரோஜன் மக்களின் இந்த சடங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. ஆனால் இம்மக்கள் உடல்களை சுத்தம் செய்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்தனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

”பல உள்ளூர்வாசிகள் தற்போது கிராமத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். மநெநெ சடங்கில் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். உறவினர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு முறைப்படி சடங்குகள் செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து கஷ்ட்டங்களில் இருந்து தங்களை காப்பார்கள்” என கிராமவாசி படூஸ் கூறினார்.

இதையும் படிங்க: 25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.