ETV Bharat / bharat

தாயை தோள்பட்டையில் சுமந்தே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மகள்கள்..!

மத்தியப்பிரதேச மாநிலம், ரேவாவில், நான்கு பெண்கள் தங்கள் தாயை கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்குச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author img

By

Published : Apr 1, 2022, 9:05 PM IST

When four daughters gave shoulders to their mother's dead body in Madhya Pradesh  When four daughters in Madhya Pradesh had to carry their sick mom on their head  Tragic story in Rewa where a sick lady died after ambulance did not arrive on time  தாயை தூக்கிச்சென்ற மகள்கள்  தாயை தோலில் சுமந்தே மருத்துவமனைக்கு சென்ற மகள்கள்  மத்தியப்பிரதேசத்தில் தாயை தோலில் சுமந்தே மருத்துவமனைக்கு சென்ற மகள்கள்  தாயை தோலில் சுமந்து சென்ற மகள்கள்
தாயை தூக்கிச்சென்ற மகள்கள்

மத்தியப் பிரதேசம்: ரேவா பகுதியில் சில நாள்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் அவதியிலிருந்த 80 வயது மூதாட்டி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, அவரது குடும்பத்தினர், ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும், ஆம்புலன்ஸ் வராததால், அவரது நான்கு மகள்கள், அம்மூதாட்டியை தங்களின் தோள்பட்டையில் சுமந்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அதாவது, தங்களது தாயினை கட்டிலில் வைத்து, அவரை கட்டிலுடன் தோள்பட்டையில் சுமந்து, நடந்தே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில், ஒருவர் தாயை தோள்பட்டையிலும், இடுப்பில் குழந்தையையும் வைத்து சுமந்து சென்றார். இருப்பினும், அவர்களால் தங்களது தாயைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனெனில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே, அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

தாய் உயிரிழந்ததாகக் கூறியதையடுத்து, மீண்டும் தங்களது தோள்பட்டை மீது சுமந்துகொண்டே வீடு திரும்பியுள்ளனர், அவரது நான்கு மகள்கள். ஆம்புலன்ஸ் வராததால், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தோள்பட்டையில் சுமந்து சென்றதும், மீண்டும் வீட்டிற்குத் தோள்பட்டையில் சுமந்தே தாயின் உடலை எடுத்து வந்ததும் காண்போரை கண்கலங்கச் செய்தது. இதனை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொலி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசிய புர்கா பெண் கைது!

மத்தியப் பிரதேசம்: ரேவா பகுதியில் சில நாள்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் அவதியிலிருந்த 80 வயது மூதாட்டி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, அவரது குடும்பத்தினர், ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும், ஆம்புலன்ஸ் வராததால், அவரது நான்கு மகள்கள், அம்மூதாட்டியை தங்களின் தோள்பட்டையில் சுமந்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அதாவது, தங்களது தாயினை கட்டிலில் வைத்து, அவரை கட்டிலுடன் தோள்பட்டையில் சுமந்து, நடந்தே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில், ஒருவர் தாயை தோள்பட்டையிலும், இடுப்பில் குழந்தையையும் வைத்து சுமந்து சென்றார். இருப்பினும், அவர்களால் தங்களது தாயைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனெனில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே, அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

தாய் உயிரிழந்ததாகக் கூறியதையடுத்து, மீண்டும் தங்களது தோள்பட்டை மீது சுமந்துகொண்டே வீடு திரும்பியுள்ளனர், அவரது நான்கு மகள்கள். ஆம்புலன்ஸ் வராததால், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தோள்பட்டையில் சுமந்து சென்றதும், மீண்டும் வீட்டிற்குத் தோள்பட்டையில் சுமந்தே தாயின் உடலை எடுத்து வந்ததும் காண்போரை கண்கலங்கச் செய்தது. இதனை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொலி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசிய புர்கா பெண் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.