ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் சிறுவனின் பின் பகுதியில் பட்டாசு வெடித்த கொடூரம்...!

author img

By

Published : Nov 1, 2022, 10:35 PM IST

ஐதராபாத்தில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் பின் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பட்டாசு வைத்து வெடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் சிறுவனின் பின் பகுதியில் பட்டாசு வெடித்த கொடூரம்
ஹைதராபாத்தில் சிறுவனின் பின் பகுதியில் பட்டாசு வெடித்த கொடூரம்

குஷிநகர் (உத்தரபிரதேசம்): வேலைக்காக ஹைதராபாத் வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் பின் பகுதியில் ஒரு சிலர் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் உத்தரப்பிரதேசத்தில் தனது தாயிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விசுன்புரா காவல் நிலையத்தில் ஹைதராபாத்தில் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுவனின் தாய் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தன் மகனை ஹைதராபாத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று, ஒரு சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனின் பின் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடித்து உள்ளனர். பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். ஆகையால் மகனைத் தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து விசுன்புரா காவல் நிலைய காவலர்கள் அளித்த தகவலின் பேரில் ஹைதராபாத் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சிறுவனைக் கொடுமைப் படுத்தியதை வீடியோ எடுத்து அந்த நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கோயிலுக்கு சென்ற மாணவனை கொடூரமாக தாக்கி கொன்ற சிறுத்தை

குஷிநகர் (உத்தரபிரதேசம்): வேலைக்காக ஹைதராபாத் வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் பின் பகுதியில் ஒரு சிலர் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் உத்தரப்பிரதேசத்தில் தனது தாயிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விசுன்புரா காவல் நிலையத்தில் ஹைதராபாத்தில் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுவனின் தாய் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தன் மகனை ஹைதராபாத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று, ஒரு சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனின் பின் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடித்து உள்ளனர். பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். ஆகையால் மகனைத் தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து விசுன்புரா காவல் நிலைய காவலர்கள் அளித்த தகவலின் பேரில் ஹைதராபாத் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சிறுவனைக் கொடுமைப் படுத்தியதை வீடியோ எடுத்து அந்த நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கோயிலுக்கு சென்ற மாணவனை கொடூரமாக தாக்கி கொன்ற சிறுத்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.