ETV Bharat / bharat

நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

author img

By

Published : May 5, 2023, 5:34 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா அருகே நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gun shoot
துப்பாக்கிச்சூடு

மொரேனா: மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டம், லேபா பகுதியைச் சேர்ந்தவர்கள் கஜேந்திர சிங் தோமர், தீர் சிங் தோமர். இவர்கள் இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தான், 6 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டு கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பள்ளிக்கூடம் அமைப்பதற்காக கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் தீர் சிங் குடும்பத்தினர் மாட்டுச் சாணத்தை கொட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகராறில் தீர் சிங்கின் குடும்பத்தினர் இருவர் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கஜேந்திர சிங் தோமரின் குடும்பம், சொந்த ஊரில் இருந்து வேறு பகுதியில் குடியேறினர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமரசம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் இன்று (மே 5) சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்போது அவர்களை வழிமறித்த தீர் சிங் குடும்பத்தினர் தகராறு செய்தனர். மேலும் கம்புகளால் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது தீர் சிங் குடும்பத்தைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் கஜேந்திர சிங், அவரது இரு மகன்கள் பண்டி தோமர், சஞ்சு தோமர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இத்தாக்குதலில் 3 பெண்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தகவலறிந்து வந்த போலீசார் 6 சடலங்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால், லேபா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: KSRTC Woman Attacked: கேரள அரசு பேருந்தில் தமிழக பெண்ணுக்கு கத்திகுத்து.. கேரள இளைஞர் தற்கொலைக்கு முயற்சி!

மொரேனா: மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டம், லேபா பகுதியைச் சேர்ந்தவர்கள் கஜேந்திர சிங் தோமர், தீர் சிங் தோமர். இவர்கள் இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தான், 6 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டு கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பள்ளிக்கூடம் அமைப்பதற்காக கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் தீர் சிங் குடும்பத்தினர் மாட்டுச் சாணத்தை கொட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகராறில் தீர் சிங்கின் குடும்பத்தினர் இருவர் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கஜேந்திர சிங் தோமரின் குடும்பம், சொந்த ஊரில் இருந்து வேறு பகுதியில் குடியேறினர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமரசம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் இன்று (மே 5) சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்போது அவர்களை வழிமறித்த தீர் சிங் குடும்பத்தினர் தகராறு செய்தனர். மேலும் கம்புகளால் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது தீர் சிங் குடும்பத்தைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் கஜேந்திர சிங், அவரது இரு மகன்கள் பண்டி தோமர், சஞ்சு தோமர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இத்தாக்குதலில் 3 பெண்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தகவலறிந்து வந்த போலீசார் 6 சடலங்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால், லேபா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: KSRTC Woman Attacked: கேரள அரசு பேருந்தில் தமிழக பெண்ணுக்கு கத்திகுத்து.. கேரள இளைஞர் தற்கொலைக்கு முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.