ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கரோனா

author img

By

Published : Apr 12, 2021, 12:04 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19 India tracker: State-wise report - India reports 1,68,912 new COVID19 cases
COVID-19 India tracker: State-wise report - India reports 1,68,912 new COVID19 cases

டெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் வார இறுதி நாள்கள், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717ஆக உள்ளது.

நேற்று சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 179ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து ஆயிரத்து ஒன்பதாக உள்ளது.

வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை, 10 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 565 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் வார இறுதி நாள்கள், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717ஆக உள்ளது.

நேற்று சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 179ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து ஆயிரத்து ஒன்பதாக உள்ளது.

வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை, 10 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 565 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.