ETV Bharat / bharat

"அருணாசல பிரதேசத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது" - சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் சர்ச்சை!

author img

By

Published : Apr 5, 2023, 12:50 PM IST

அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு மறுபெயர் அறிவித்தது சீனாவின் இறையான்மை உரிமை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

China
China

பீஜிங் : அருணாசல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை ஜங்கன் என்றும் தெற்கு திபெத் என்றும் அறிவித்தது சீனாவின் இறையான்மை உரிமைகளுக்கு உட்பட்டது என சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா அங்கு பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்பு, தொலைத் தொடர்பு டவர்கள் அமைப்பது, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறிய செயல்களை சீனா மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது எல்லையில் உள்ள இந்திய வீரர்களை சீண்டி வம்புக்கிழுத்து வருகிறது. இந்நிலையில், புதிய பிரச்சினையாக அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு மறுபெயர் சூட்டி சீனா வரைபடம் வெளியிட்டு உள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள ஐந்து மலைச் சிகரங்கள், தலா இரண்டு குடியிருப்புப் பகுதிகள், நிலப்பரப்பு மற்றும் இரண்டு ஆறுகளுக்கு சீனா, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் சூட்டியும், சில பகுதிகளை தெற்கு திபெத் மற்றும் ஜங்கன் என்று அழைத்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) சீன அமைச்சகம் வரைபடம் வெளியிட்டது.

இதில் சீனா பெயரிட்டு உள்ள ஒரு பகுதி அருனாசல பிரதேச தலைநகர் இடா நகர் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதுபோன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல எனக் கூறப்பட்டது. இதற்கு முன் இரு முறை இந்திய பகுதிகளுக்கு சீனா பெயரிட்டு சொந்தம் கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கும், 2021 ஆம் ஆண்டு 15 இடங்களுக்கும் சீனா பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இந்த பெயர் மாற்று அறிவிப்பு நடவடிக்கையை இந்தியா நிராகரித்தது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும் என்றும் சீனாவின் பெயர் மாற்றம் அருணாசல பிரதேசத்தில் நிலவும் யதார்த்த சூழலை மாற்றாது என்றும் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

மேலும் சீனாவின் பெயர் மாற்றம் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரிப்பதாகவும், அங்குள்ள 11 இடங்களுக்கு மறுபெயரிட்டு சீன வெளியிட்டு உள்ள ஒருதலைபட்சமான பிராந்திய உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு மறுபெயர் அறிவித்தது சீன இறையான்மையின் உரிமைகளுக்கு உட்பட்டது என சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், மா நிங், "ஜங்கன் (அருணாசல பிரதேசத்திற்கு சீனா வைத்த பெயர்) சீனாவின் ஒரு பகுதி. மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்கள் நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டு, சீன அரசாங்க அதிகாரிகள் ஜாங்னானின் சில பகுதிகளின் பெயர்களை தரப்படுத்தி உள்ளனர். இது சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டது" எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா பதில் - இந்தியாவுக்கு ஆதரவா?

பீஜிங் : அருணாசல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை ஜங்கன் என்றும் தெற்கு திபெத் என்றும் அறிவித்தது சீனாவின் இறையான்மை உரிமைகளுக்கு உட்பட்டது என சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா அங்கு பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்பு, தொலைத் தொடர்பு டவர்கள் அமைப்பது, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறிய செயல்களை சீனா மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது எல்லையில் உள்ள இந்திய வீரர்களை சீண்டி வம்புக்கிழுத்து வருகிறது. இந்நிலையில், புதிய பிரச்சினையாக அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு மறுபெயர் சூட்டி சீனா வரைபடம் வெளியிட்டு உள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள ஐந்து மலைச் சிகரங்கள், தலா இரண்டு குடியிருப்புப் பகுதிகள், நிலப்பரப்பு மற்றும் இரண்டு ஆறுகளுக்கு சீனா, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் சூட்டியும், சில பகுதிகளை தெற்கு திபெத் மற்றும் ஜங்கன் என்று அழைத்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) சீன அமைச்சகம் வரைபடம் வெளியிட்டது.

இதில் சீனா பெயரிட்டு உள்ள ஒரு பகுதி அருனாசல பிரதேச தலைநகர் இடா நகர் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதுபோன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல எனக் கூறப்பட்டது. இதற்கு முன் இரு முறை இந்திய பகுதிகளுக்கு சீனா பெயரிட்டு சொந்தம் கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கும், 2021 ஆம் ஆண்டு 15 இடங்களுக்கும் சீனா பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இந்த பெயர் மாற்று அறிவிப்பு நடவடிக்கையை இந்தியா நிராகரித்தது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும் என்றும் சீனாவின் பெயர் மாற்றம் அருணாசல பிரதேசத்தில் நிலவும் யதார்த்த சூழலை மாற்றாது என்றும் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

மேலும் சீனாவின் பெயர் மாற்றம் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரிப்பதாகவும், அங்குள்ள 11 இடங்களுக்கு மறுபெயரிட்டு சீன வெளியிட்டு உள்ள ஒருதலைபட்சமான பிராந்திய உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு மறுபெயர் அறிவித்தது சீன இறையான்மையின் உரிமைகளுக்கு உட்பட்டது என சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், மா நிங், "ஜங்கன் (அருணாசல பிரதேசத்திற்கு சீனா வைத்த பெயர்) சீனாவின் ஒரு பகுதி. மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்கள் நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டு, சீன அரசாங்க அதிகாரிகள் ஜாங்னானின் சில பகுதிகளின் பெயர்களை தரப்படுத்தி உள்ளனர். இது சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டது" எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா பதில் - இந்தியாவுக்கு ஆதரவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.