ETV Bharat / bharat

ஆழ்துளைக் கிணற்றில் 12 வயது சிறுவன் - சத்தீஸ்கரில் மீட்புப்பணிகள் தீவிரம்

சத்தீஸ்கரில் 12 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில், அவனை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

author img

By

Published : Jun 10, 2022, 11:00 PM IST

சத்தீஸ்கர் சிறுவன் ராகுல் சாஹூ
சத்தீஸ்கர் சிறுவன் ராகுல் சாஹூ

ஜாஞ்ச்கிர் சம்பா: சத்தீஸ்கர் ஜாஞ்ச்கிர் சம்பாவின், பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ராகுல் சாஹூ (12). அந்தச் சிறுவன் தனது வீட்டின் பின்னால் இன்று மாலை (ஜுன் 10) விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். குடும்பத்தினர் சிறுவனை தேடி வெளியே சென்றபோது, ​ஆழ்துளைக்கிணற்றில் இருந்து அவனின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.

சிறுவன் ராகுல் சாஹூ
சிறுவன் ராகுல் சாஹூ

மீட்புப்பணி தீவிரம்: இதையடுத்து, உறவினர்கள் குழியில் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இருந்து சத்தம் வருவதை உறுதிசெய்து, அவசர உதவி எண்ணான 112-க்கு தகவல் அளித்தனர். தற்போது, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியை கண்காணித்து வருகின்றனர்.

சிறுவன் ராகுல் சாஹு விழுந்த ஆழ்துளை கிணறு
சிறுவன் ராகுல் சாஹு விழுந்த ஆழ்துளை கிணறு

முதலமைச்சர் ட்வீட்: இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இடத்தில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தொடர்ந்து தகவலை பெற்று வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ராகுலை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டிகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் 12 வயது சிறுவன் சத்தீஸ்கரில் மீட்புப்பணி தீவிரம்
மீட்புப்பணிகள் தீவிரம்

ஜாஞ்ச்கிர் சம்பா: சத்தீஸ்கர் ஜாஞ்ச்கிர் சம்பாவின், பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ராகுல் சாஹூ (12). அந்தச் சிறுவன் தனது வீட்டின் பின்னால் இன்று மாலை (ஜுன் 10) விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். குடும்பத்தினர் சிறுவனை தேடி வெளியே சென்றபோது, ​ஆழ்துளைக்கிணற்றில் இருந்து அவனின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.

சிறுவன் ராகுல் சாஹூ
சிறுவன் ராகுல் சாஹூ

மீட்புப்பணி தீவிரம்: இதையடுத்து, உறவினர்கள் குழியில் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இருந்து சத்தம் வருவதை உறுதிசெய்து, அவசர உதவி எண்ணான 112-க்கு தகவல் அளித்தனர். தற்போது, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியை கண்காணித்து வருகின்றனர்.

சிறுவன் ராகுல் சாஹு விழுந்த ஆழ்துளை கிணறு
சிறுவன் ராகுல் சாஹு விழுந்த ஆழ்துளை கிணறு

முதலமைச்சர் ட்வீட்: இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இடத்தில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தொடர்ந்து தகவலை பெற்று வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ராகுலை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டிகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் 12 வயது சிறுவன் சத்தீஸ்கரில் மீட்புப்பணி தீவிரம்
மீட்புப்பணிகள் தீவிரம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.