ETV Bharat / bharat

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி ஓரிரு மாதங்களில் அறிமுகம்

author img

By

Published : Sep 1, 2022, 4:33 PM IST

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, சில மாதங்களில் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதான் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

india
india

டெல்லி: பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்க, சீரம் இந்தியா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தது. தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் இன்று (செப்.1) நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா, "கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும். 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஆனால், சரியான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தடுப்பூசிகள் முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளுக்கும், அடுத்த ஆண்டு முதல் சில தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். முதலில் இந்தியாவுக்கும், பிறகு வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி அமெரிக்காவில் வழக்கு

டெல்லி: பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்க, சீரம் இந்தியா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தது. தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் இன்று (செப்.1) நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா, "கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும். 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஆனால், சரியான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தடுப்பூசிகள் முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளுக்கும், அடுத்த ஆண்டு முதல் சில தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். முதலில் இந்தியாவுக்கும், பிறகு வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி அமெரிக்காவில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.