ETV Bharat / bharat

போலீசாருக்கு சவால் விட்ட போதை ஆசாமி கைது...!

author img

By

Published : Mar 27, 2022, 8:21 PM IST

குடிபோதையில் காவல்நிலையத்துக்கு தொலைபேசியில் அழைத்து, முடிந்தால் பிடித்து பாருங்கள் என சவால் விட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாருக்கு சவால் விட்ட போதை ஆசாமி கைது...!
போலீசாருக்கு சவால் விட்ட போதை ஆசாமி கைது...!

மேற்கு சம்பரன்: பிகாரில், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள சன்கி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஷிகர்பூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், தற்போது தான் மது குடித்துக் கொண்டிருப்பதாகவும், முடிந்தால் போலீசார் தன்னை பிடிக்கலாம் என்றும் சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.

போலீசார் முதல் முறை இந்த தொலைபேசி அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த நபர் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சவால் விட்டு, காவல்துறையினரிடமே வம்பிழுத்துள்ளார்.

இதனால், காவல்துறையினர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவர் உண்மையிலேயே மதுகுடித்துக் கொண்டு, போதையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, மதுபானங்களை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் அருந்துவது சட்டப்படி குற்றம், இதற்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2018இல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மது குடிப்பதை கட்டுப்படுத்த பிகார் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிற மாநிலங்களை விட பிகாரில்தான் மதுகுடிப்போரின் எண்ணிக்கையும், அதுசார்ந்த குற்றங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

இதையும் படிங்க:மாட்டின் வாலால் மாட்டிக் கிட்ட சபாநாயகர்.. சீக்கிய அமைப்புகளிடம் மன்னிப்பு!

மேற்கு சம்பரன்: பிகாரில், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள சன்கி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஷிகர்பூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், தற்போது தான் மது குடித்துக் கொண்டிருப்பதாகவும், முடிந்தால் போலீசார் தன்னை பிடிக்கலாம் என்றும் சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.

போலீசார் முதல் முறை இந்த தொலைபேசி அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த நபர் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சவால் விட்டு, காவல்துறையினரிடமே வம்பிழுத்துள்ளார்.

இதனால், காவல்துறையினர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவர் உண்மையிலேயே மதுகுடித்துக் கொண்டு, போதையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, மதுபானங்களை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் அருந்துவது சட்டப்படி குற்றம், இதற்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2018இல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மது குடிப்பதை கட்டுப்படுத்த பிகார் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிற மாநிலங்களை விட பிகாரில்தான் மதுகுடிப்போரின் எண்ணிக்கையும், அதுசார்ந்த குற்றங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

இதையும் படிங்க:மாட்டின் வாலால் மாட்டிக் கிட்ட சபாநாயகர்.. சீக்கிய அமைப்புகளிடம் மன்னிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.