இது குறித்து காவல் துறை கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன், வயல்களில் வேலை பார்த்திருந்த தனது சகோதரருக்கு மதிய உணவு வழங்க 23 வயது பெண் சென்றுள்ளார்.
அப்போது அவரைக் கடத்திய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த நபர் தன்விர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட தன்விர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தெலங்கானாவில் 3 பேர் கைது!