ETV Bharat / bharat

ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? - மோடிக்கு ராகுல் கேள்வி

author img

By

Published : Jun 17, 2020, 11:36 AM IST

Updated : Jun 17, 2020, 1:28 PM IST

டெல்லி : லடாக் எல்லைப் பிரச்னையில் சீனாவுடன் எழுந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் மௌனம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

லடாக் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவித்துள்ளன.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே எழுந்த கைக்கலப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள வேளையில், பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "பிரதமர் மௌனம் காப்பது ஏன், ஒளிந்துகொண்டிருப்பது ஏன்? இதற்கு மேல் காத்திருக்க முடியாது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் அறிய வேண்டும்.

இந்திய வீரர்களைக் கொல்ல, நம் நிலத்தைப் பறிக்க சீனாவுக்கு என்ன துணிச்சல்?" என அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, சீன தேசியக்கொடி எரிப்பு!

லடாக் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவித்துள்ளன.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே எழுந்த கைக்கலப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள வேளையில், பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "பிரதமர் மௌனம் காப்பது ஏன், ஒளிந்துகொண்டிருப்பது ஏன்? இதற்கு மேல் காத்திருக்க முடியாது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் அறிய வேண்டும்.

இந்திய வீரர்களைக் கொல்ல, நம் நிலத்தைப் பறிக்க சீனாவுக்கு என்ன துணிச்சல்?" என அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, சீன தேசியக்கொடி எரிப்பு!

Last Updated : Jun 17, 2020, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.