ETV Bharat / bharat

கரோனா வைரஸ் இனி 'கோவிட்-19' என வழங்கப்படும் - கொரோனா வைரஸ் அதிகாரப்பூர்வமான பெயர்

ஜெனிவா : உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸுக்கு 'கோவிட்-19' என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டியுள்ளது.

WHO director general, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்
WHO director general
author img

By

Published : Feb 12, 2020, 8:52 AM IST

Updated : Mar 17, 2020, 6:18 PM IST

சீனாவில் 'கரோனா வைரஸ்' என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு 'கோவிட்-19' என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமான பெயரை சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டட்ரோஸ் அதான்நோம் கிப்ரெய்சஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா, வைரஸ், டிசீஸ் ஆகிய பெயர்களை இணைத்து 'கோவிட்-19' என்ற புது சொல்லை உருவாக்கியுள்ளோம். தவறான சொற்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த பெயரை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்றார்.

கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வது குறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் ஜெனிவாவில் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் உள்பட 400 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிதி அளித்துள்ளது.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!

சீனாவில் 'கரோனா வைரஸ்' என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு 'கோவிட்-19' என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமான பெயரை சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டட்ரோஸ் அதான்நோம் கிப்ரெய்சஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா, வைரஸ், டிசீஸ் ஆகிய பெயர்களை இணைத்து 'கோவிட்-19' என்ற புது சொல்லை உருவாக்கியுள்ளோம். தவறான சொற்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த பெயரை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்றார்.

கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வது குறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் ஜெனிவாவில் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் உள்பட 400 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிதி அளித்துள்ளது.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!

Last Updated : Mar 17, 2020, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.