ஊரடங்கு காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் யாரும் தேவை இன்றி, வெளியில் வரக்கூடாது என மத்திய அரசு தெரிவித்த நிலையில் வீட்டில் இருப்பவர்கள், தங்களால் முடிந்த வரை சிறு, சிறு நல்ல காரியங்களைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் பகுதியைச் சேர்ந்த ஒரு தந்தை - மகன் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நினைத்து, தனது வீட்டின் முன் 16 அடி கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். வெறும் ஐந்து நாட்களில் இதனைத் தோண்டி முடித்து, கிராம மக்கல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் தொடரும் பொது முடக்கம்