ETV Bharat / bharat

'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா!

author img

By

Published : Jun 19, 2020, 11:02 AM IST

Updated : Jun 19, 2020, 11:38 AM IST

ஸ்ரீநகர்: இந்தியா- சீனா இடையே போர் தீர்வாகாது, ராணுவ பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

Farooq Abdullah  solution  India-China face-off  Galwan valley  இந்தியா சீனா மோதல்  பரூக் அப்துல்லா  போர் தீர்வாகாது
Farooq Abdullah solution India-China face-off Galwan valley இந்தியா சீனா மோதல் பரூக் அப்துல்லா போர் தீர்வாகாது

இந்தியா- சீனா ராணுவத்தினர் இடையே கிழக்கு லடாக்கில் நடந்த வன்முறையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தனது கவலையை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றங்களைத் தடுக்க ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். போர் நிரந்தர தீர்வு அல்ல; இது தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களின் நிலைமையை மோசமாக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆசிய பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை வாழும் இரண்டு நாடுகளுக்கு இடையே பிரச்னையை கையாளுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளும் வீழ்ச்சியின் விளைவை அறிந்திருக்கின்றன என்று நம்புகிறேன்.

இந்தப் பெருந்தொற்று காரணமாக உலக மக்கள் இணைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த மனித இனமும் பல்வேறு சவால்களால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற நெருக்கடிகளுக்கு கூட்டாகப் பதிலளிக்க வேண்டும்.

பிராந்தியத்தின் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். சீன ராணுவத்தின் தாக்குதலையடுத்து, எல்லையில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமைகோரும் காங்கிரஸ்!

இந்தியா- சீனா ராணுவத்தினர் இடையே கிழக்கு லடாக்கில் நடந்த வன்முறையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தனது கவலையை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றங்களைத் தடுக்க ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். போர் நிரந்தர தீர்வு அல்ல; இது தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களின் நிலைமையை மோசமாக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆசிய பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை வாழும் இரண்டு நாடுகளுக்கு இடையே பிரச்னையை கையாளுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளும் வீழ்ச்சியின் விளைவை அறிந்திருக்கின்றன என்று நம்புகிறேன்.

இந்தப் பெருந்தொற்று காரணமாக உலக மக்கள் இணைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த மனித இனமும் பல்வேறு சவால்களால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற நெருக்கடிகளுக்கு கூட்டாகப் பதிலளிக்க வேண்டும்.

பிராந்தியத்தின் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். சீன ராணுவத்தின் தாக்குதலையடுத்து, எல்லையில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமைகோரும் காங்கிரஸ்!

Last Updated : Jun 19, 2020, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.