ETV Bharat / bharat

குல்பூஷன் ஜாதவ் சார்பாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

author img

By

Published : Aug 21, 2020, 2:45 PM IST

டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் அவருக்கு ஆதரவாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் எனவும், இதுதொடர்பாக பாகிஸ்தான் நாட்டுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்று வருதவாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ்
குல்பூஷன் ஜாதவ்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய, அவருக்கு ஆதரவாக இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இவ்விவகாரம் குறித்து தூதரக ரீதியாக பாகிஸ்தான் நாட்டுடன் ஆலோசித்து வருகிறோம். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப சுதந்திரமான நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஜாதவுக்கு ஆதரவாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்.

முக்கிய ஆவணங்களை சமர்பித்தல், ஜாதவுக்கு தூதரக உதவிகளை அளித்தல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தீர்வளிப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது" என்றார். ஆனால், ஜாதவ் சார்பாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்களே ஆஜராவார்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞரை நியமிப்பது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தக் கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இது குறித்த வழக்கின் விசாரணை, செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (வயது 49), கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாகிஸ்தானை உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால் அதனை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து, வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்தியத் தூதரகம் அணுக பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பைப் பெற்றது.

குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவரை பத்திரமாக மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், ஜாதவுக்காக வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்கக் கோரியும் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவும் ஆலோசகர்களாக மூன்று மூத்த வழக்குரைஞர்களை நியமித்தும், இந்திய அரசு சார்பில் வழக்காட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை நியமிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறும் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில், தலைமை நீதிபதி அதார் மினல்லா, நீதிபதிகள் அமீர் ஃபருக், மியான் குல் அவுரங்கசீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கை, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான சூழலில் நடைபெறவுள்ள பேஸ்புக் நிர்வாகிகள், நிலைக்குழு உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம்!

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய, அவருக்கு ஆதரவாக இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இவ்விவகாரம் குறித்து தூதரக ரீதியாக பாகிஸ்தான் நாட்டுடன் ஆலோசித்து வருகிறோம். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப சுதந்திரமான நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஜாதவுக்கு ஆதரவாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்.

முக்கிய ஆவணங்களை சமர்பித்தல், ஜாதவுக்கு தூதரக உதவிகளை அளித்தல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தீர்வளிப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது" என்றார். ஆனால், ஜாதவ் சார்பாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்களே ஆஜராவார்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞரை நியமிப்பது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தக் கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இது குறித்த வழக்கின் விசாரணை, செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (வயது 49), கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாகிஸ்தானை உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால் அதனை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து, வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்தியத் தூதரகம் அணுக பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பைப் பெற்றது.

குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவரை பத்திரமாக மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், ஜாதவுக்காக வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்கக் கோரியும் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவும் ஆலோசகர்களாக மூன்று மூத்த வழக்குரைஞர்களை நியமித்தும், இந்திய அரசு சார்பில் வழக்காட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை நியமிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறும் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில், தலைமை நீதிபதி அதார் மினல்லா, நீதிபதிகள் அமீர் ஃபருக், மியான் குல் அவுரங்கசீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கை, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான சூழலில் நடைபெறவுள்ள பேஸ்புக் நிர்வாகிகள், நிலைக்குழு உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.