1984ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பணிநிலையைச் சேர்ந்த விவேக் குமார் ஜோரி, எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படையின் 25ஆவது இயக்குநர் விவேக் குமார் ஜோரி என்பது குறிப்படத்தக்கது. ஒரு வருட காலமாக இயக்குநராக இருந்த மிஸ்ரா ஓய்வுபெற்ற நிலையில், இந்த புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விவேக் குமார் ஜோரி ஓய்வுபெற உள்ளார். முன்னதாக, ரா அமைப்பின் சிறப்புச் செயலாளராக ஜோரி செயல்பட்டுவந்தார். ஜோரி, பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.