சீனாவில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளையும் அச்சுறுத்திவருகிறது. இதில் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதில் அதிகமாக கேரளாவில் 17 பேருக்கும், ஹரியானாவில் 14 பேருக்கும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் 11 பேருக்கும், தெலங்கானா, தமிழ்நாட்டில் ஒருவருக்கும் உள்பட மொத்தம் 56 இந்தியர்களுக்கும், 17 வெளிநாட்டவருக்கும் கோவிட் 19 பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மாநில எல்லையில் 12 லட்சம் பேரும், விமான நிலையத்தில் 15 ஆயிரம் பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாக அறிவித்ததையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பது உட்பட, வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை