ETV Bharat / bharat

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியாவின் உதவி தேவை - அமெரிக்கா

author img

By

Published : May 10, 2020, 12:56 AM IST

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

Jaishankar
Jaishankar

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத் நேற்று இந்தியா வந்திருந்தார்.

சில மணி நேரமே நீடித்த இந்தப் பயணத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ஆகியோர் சந்தித்து ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் மூத்த பத்திரையானர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய அரசு உயர் அலுவலர் ஒருவர், "சில மணி நேர பேச்சுவார்த்தைக்கு அவர் (கலில்ஜாத்) இவ்வளவு தூரம் வந்திருப்பதை வைத்தே பேச்சுவார்த்தையின் அவசரம் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல், பாதுகாப்பு, அமெரிக்கா-தலிபான் பேச்சுவார்த்தையின் தாக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது" என்றார்.

ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக நிலவிவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அங்குள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தமிட்டுக் கொண்டன.

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்நியப் படையினரை விலக்கிக்கொள்ள அமெரிக்காவும், வன்முறையைக் கைவிட தலிபான் அமைப்பும் இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டன.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு-தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தொடங்க இருதரப்பினரும் கைதிகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்றுவதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அந்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான் ஜால்மே கலில்ஜாத்தின் இந்தியப் பயணம் அமைந்திருந்துள்ளது.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்தியாவைப் பொறுத்தளவில் தலிபான்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளே. ஆகையால், தலிபான் விஷயத்தில் இந்தியா சற்று விலகியே உள்ளது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கிடையே சாபஹார் துறைமுகம் (ஈரான்) வாயிலாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா, மனிதாபிமான அடிப்படையில், 70 ஆயிரம் டன் கோதுமை வழங்கி உள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, அந்நாட்டுக்குத் தேயிலை, சர்க்கரை ஆகியவை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க : 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத் நேற்று இந்தியா வந்திருந்தார்.

சில மணி நேரமே நீடித்த இந்தப் பயணத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ஆகியோர் சந்தித்து ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் மூத்த பத்திரையானர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய அரசு உயர் அலுவலர் ஒருவர், "சில மணி நேர பேச்சுவார்த்தைக்கு அவர் (கலில்ஜாத்) இவ்வளவு தூரம் வந்திருப்பதை வைத்தே பேச்சுவார்த்தையின் அவசரம் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல், பாதுகாப்பு, அமெரிக்கா-தலிபான் பேச்சுவார்த்தையின் தாக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது" என்றார்.

ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக நிலவிவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அங்குள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தமிட்டுக் கொண்டன.

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்நியப் படையினரை விலக்கிக்கொள்ள அமெரிக்காவும், வன்முறையைக் கைவிட தலிபான் அமைப்பும் இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டன.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு-தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தொடங்க இருதரப்பினரும் கைதிகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்றுவதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அந்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான் ஜால்மே கலில்ஜாத்தின் இந்தியப் பயணம் அமைந்திருந்துள்ளது.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்தியாவைப் பொறுத்தளவில் தலிபான்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளே. ஆகையால், தலிபான் விஷயத்தில் இந்தியா சற்று விலகியே உள்ளது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கிடையே சாபஹார் துறைமுகம் (ஈரான்) வாயிலாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா, மனிதாபிமான அடிப்படையில், 70 ஆயிரம் டன் கோதுமை வழங்கி உள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, அந்நாட்டுக்குத் தேயிலை, சர்க்கரை ஆகியவை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க : 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.