ETV Bharat / bharat

தொடரும் மூடநம்பிக்கை... நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்திய பக்தர்!

author img

By

Published : Oct 25, 2020, 12:28 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன் நாக்கை வெட்டி கோயிலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster
Youngster

உத்தரப் பிரதேச மாநிலம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்மரம் யாதவ். நேற்று, தேவி மாதா கோயிலுக்குச் சென்ற இவர், தனது நாக்கை வெட்டி தேவி மாதா சிலைக்கு முன்பு வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, யாதவை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், யாதவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்றபோது கோயிலில் இருந்த சியாம் சுந்தர் இதுகுறித்து கூறுகையில், "நாக்கை வெட்டிக் கொள்வதற்கு முன்பே, தனக்குள் கடவுள் புகுந்துவிட்டதாக யாதவ் தெரிவித்தார். கடவுளுக்குப் பரிசாக தனது தலையை வெட்டி காணிக்கையாக செலுத்த விரும்பியதாக தெரிவித்தார். ஆனால், இதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே தனது நாக்கை வெட்டி கடவுளின் சிலைக்கு முன்பு காணிக்கையாக வைத்தார். அவரின் நாக்கை மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்" என்றார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் மூடநம்பிக்கையால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்மரம் யாதவ். நேற்று, தேவி மாதா கோயிலுக்குச் சென்ற இவர், தனது நாக்கை வெட்டி தேவி மாதா சிலைக்கு முன்பு வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, யாதவை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், யாதவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்றபோது கோயிலில் இருந்த சியாம் சுந்தர் இதுகுறித்து கூறுகையில், "நாக்கை வெட்டிக் கொள்வதற்கு முன்பே, தனக்குள் கடவுள் புகுந்துவிட்டதாக யாதவ் தெரிவித்தார். கடவுளுக்குப் பரிசாக தனது தலையை வெட்டி காணிக்கையாக செலுத்த விரும்பியதாக தெரிவித்தார். ஆனால், இதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே தனது நாக்கை வெட்டி கடவுளின் சிலைக்கு முன்பு காணிக்கையாக வைத்தார். அவரின் நாக்கை மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்" என்றார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் மூடநம்பிக்கையால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.