சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் துபாய்க்கு சென்று சண்டிகருக்கு திரும்பியுள்ளார். இதன் பின்னர் அவர் வீட்டில் 14 நாள்கள் தனிமைபடுத்தலில் இருந்தார். அதன் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு கரோனா இருப்பது போன்ற எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் 15ஆவது நாள் அவருக்கு காய்ச்சல் வந்த பிறகு அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இது 15ஆவது நாளில் கண்டறியப்பட்ட முதல் கரோனா தொற்று சம்பவம் என யுடி சண்டிகர் ஆலோசகர் மனோஜ் பரிடா கூறினார். இதுபோன்ற ஒரு அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசிடம் தங்கள் மருத்துவக் குழு தெரிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க... நோய் கண்டறியும் மையங்கள் அதிகரிப்பு!