ETV Bharat / bharat

ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் உள்பட மூவர் மீது பாய்ந்த உபா சட்டம்!

author img

By

Published : Apr 22, 2020, 10:00 AM IST

டெல்லி: பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களுக்கிடையே நடைபெற்ற வன்முறையைத் தூண்டியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் உள்பட மூன்று பேர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Umar Khalid  Safoora Zargar  Meeran Haider  UAPA  Delhi Police  Jamia Millia Islamia  Northeast Delhi Violence  உமர் காலித் உபா சட்டம்  ஜாமிய மாணவர்கள் உபா சட்டம்  டெல்லி வன்முறைச் சம்பவம்  உபா சட்டம்
ஜவகர்லால் நேரு முன்னாள் மாணவர் உமர் காலித் உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த உபா சட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பிப்ரவரி மாதம் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தூண்டியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித், ஜாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மீது டெல்லி காவல் துறை உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜாமியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுவின் ஊடகத் தொடர்பாளர் சஃபூரா சர்கார், அதன் உறுப்பினர் மீரான் ஹைதர் ஆகியோர் டெல்லி காவல் துறையினரால் நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டனர். உமர் காலித் தற்போதுவரை கைதுசெய்யப்படவில்லை.

மீரான் ஹைதர் தரப்பு வழக்குரைஞர் ஊடகங்களிடம் பேசியபோது, "முதல் தகவல் அறிக்கையில் 9 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கொலை முயற்சி, தேசத்துரோகம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முன்னதாகக் குற்றப்பிரிவிலிருந்தது. அதன் பிறகு சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகத்தை நசுக்கும் அரசு: காஷ்மீர் ஊடகவியலாளர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு!

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பிப்ரவரி மாதம் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தூண்டியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித், ஜாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மீது டெல்லி காவல் துறை உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜாமியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுவின் ஊடகத் தொடர்பாளர் சஃபூரா சர்கார், அதன் உறுப்பினர் மீரான் ஹைதர் ஆகியோர் டெல்லி காவல் துறையினரால் நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டனர். உமர் காலித் தற்போதுவரை கைதுசெய்யப்படவில்லை.

மீரான் ஹைதர் தரப்பு வழக்குரைஞர் ஊடகங்களிடம் பேசியபோது, "முதல் தகவல் அறிக்கையில் 9 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கொலை முயற்சி, தேசத்துரோகம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முன்னதாகக் குற்றப்பிரிவிலிருந்தது. அதன் பிறகு சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகத்தை நசுக்கும் அரசு: காஷ்மீர் ஊடகவியலாளர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.